Showing 1345–1360 of 1501 results

  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    ரெவல்யூஷன் 2020 / Revolution 2020

    199 185
    முன்னொரு காலத்தில் , இந்தியாவின் ஒரு சின்ன டவுனில் இரண்டு புத்திசாலிப் பையன்கள் வாழ்ந்து வந்தார்கள் .
    ஒருவன் புத்திசாலித்தனத்தை வைத்துப் பணம் சம்பதித்தான் . ஒருவன் புத்திசாலித்தனத்தை வைத்துப் புரட்சியை ஆரம்பித்தான் .
    பிரச்சனை என்ன என்றால் , இருவரும் ஒரே பெண்ணை நேசித்தனர் .
    ரெவல்யூஷன் 2020 க்கு உங்களை வரவேற்கிறோம் . இது பிள்ளைப்பருவ நண்பர்களின் கதை கோபால் , ராகவ் மற்றும் ஆர்த்தி ; எல்லோரும் வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள் . காதலையும் , சந்தோஷத்தையும் வாரணாசியில் தேடுகிறார்கள் . ஆனால் , இவையெல்லாம் எளிதில் கிடைப்பதில்லை . நியாயமற்ற சமுதாயம் , ஊழல்காரர்களுக்குப் பரிசளிக்கிறது . கோபால் ஊழலுக்கு அடிபணிகிறான் . ராகவ் எதிர்த்துப் போராடுகிறான் , யார் வெற்றி கண்டார்கள் ?
    பெஸ்ட் ஸெல்லிங் ஆசிரியர் – ஃபைவ் பாயிண்ட் ஸம் ஒன் , ஒன் நைட் அட் தி கால்ஸெண்டர் , தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் , 2 ஸ்டேட்ஸ்- சேதன் பகத்திடமிருந்து மற்றும் ஒரு பிடிப்புள்ள கதை , இந்தியாவின் அடிமனதிலிருந்து உதித்தது . நீங்கள் புரட்சிக்குத் தயாரா ?
    Read more
  • SAVE 7%
  • SAVE 8%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 8%
  • SAVE 8%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    லியோ டால்ஸ்டாய் கதைகள் / Leo Tolstoy Kadhaigal

    140 130
    லியோ டால்ஸ்டாய் என்று அழைக்கப்படும் இவர் 1828 இல் பிறந்தார் .
    டால்ஸ்டாய் செல்வக் குடியிலே பிறந்திருந்தாலும் அவருடைய வாழ்க்கை ஒரு சோகக்கதையாகவே இருந்தது . டால்ஸ்டாய் படிப்பில் சூட்டிகையானவராக இருக்கவில்லை .
    ஆனால் இவருக்கு தனது தாய் மொழியான ருஷ்ய மொழி தவிர பிரெஞ்சு , ஆங்கிலம் , ஜெர்மன் , போலீஷ் , செக் , பல்கேரியா , டாடார் . இத்தாலி , அராபி , டச்சு , இலத்தீன் , கிரேக் , ஹெப்ரியூ இந்த மொழிகளிலும் நல்ல தேர்ச்சி இருந்தது . அதனால் இம்மொழிகளிலுள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை யெல்லாம் வாசிக்கும் பேறு பெற்றார் . அவற்றை ஆராயவும் செய்தார் .
    தான் கற்றறிந்த , கேட்டறிந்த வாழ்க்கை நெறிகளை வாழ்க்கையில் பின்பற்றவும் முயன்றார் . ஆனால் அவர் வாழ்க்கை முள் பாதையாகத்தானிருந்தது . ஆனாலும் அவர் அஹிம்சா நெறியைக் கடைப்பிடித்தார் .
    டால்ஸ்டாய் மேலை நாட்டில் தோன்றிய மிகத் தெளிவான சிந்தனையாளர்களில் ஒருவர் . ஒப்பற்ற நூலாசிரியர்களில் இவரும் ஒருவர் என்று இவரைப்பற்றி வர்ணிக்கிறார் காந்தியடிகள் .
    ‘ உனக்குத் தீமையைச் செய்தவருக்கும் நன்மையே செய் ‘ என்றார் புத்தர் .
    இவர்களின் கருத்துக்களைத்தான் டால்ஸ்டாயும் தன் கதைகளில் வலியுறுத்தியுள்ளார் .
    உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் டால்ஸ்டாய் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை , ஐம்பது வருடங்களை இலக்கியப் பணிக்கென்றே அர்ப்பணித்தார் . கதைகள் , குட்டிக்கதைகள் , புதினம் , நாடகம் , கட்டுரை என்று இவர் தடம் பதிக்காத துறையே இல்லை .
    அவருடைய நீதிக்கதைகளில் சில இப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன . சிறுவர் முதல் பெரியவர் வரை படித்து மகிழத்தக்க அருமையான பொக்கிஷம் அவரது கதைகள் என்றால் மிகையாகாது , நீங்களும் இவற்றைப் படியுங்கள் . மகிழுங்கள் .
    Read more
  • SAVE 7%

    லீ குவான் யூ / Lee Kuan Yew

    244 227

    லீ குவான் யூ வழக்குரைஞர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜில் . அங்கிருந்த பேராசிரியர்கள் இனபேதம் பார்க்கவில்லை . ஆனால் விளையாட்டுத்திடல் , பேருந்து , உணவுவிடுதி , வியாபார ஸ்தலங்கள் இங்கெல்லாம் மற்றவர்களால் ஆசியர்கள் நடத்தப்பட்ட விதம் கண்டு லீ கொதித்தார் . என்னதான் இங்கிலாந்தின் கட்டுப்பாடும் , நாகரீகமும் , பண்பாடும் அவரை ஈர்த்தாலும் பிரிட்டிஷ் இன வெறியர்கள் நடந்துகொண்ட விதம் அவரைத் தீவிர அரசியலை நோக்கி நகர்த்தியது . பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு , இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்தர நாடுகளாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர்களின் வேட்கையும் , வேகமும் அதிகரித்த விதம் அவருக்கு நம்பிக்கையையூட்டியது . சிங்கப்பூரில் அப்போதைக்கு ஆட்சியிலிருந்த அரசியல் கட்சி , ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்ததை அவர் ரசிக்கவில்லை . அதற்காக கம்யூனிச சித்தாந்தத்தையும் அவர் ஏற்கவில்லை . மாற்று அரசியலை முன்வைக்க முடிவுசெய்து மக்கள் செயல் கட்சியை ( Peoples Actions Party ) நிறுவி ஆட்சியைப் பிடித்தார் . 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த காலத்தில் தரைமட்டமாகக் கிடந்த சிங்கப்பூரை வானுயர்ந்த கோபுரமாக மாற்றியமைத்தார் . சிங்கப்பூர் உலக வர்த்தகத்தின் மையப் புள்ளியானது இவரது தீர்க்க தரிசனத்தால்தான் . நவீன சிங்கப்பூரின் ஒவ்வொரு அங்குலமும் இவருடைய பெயரைத்தான் ஜெபித்துக்கொண்டிருக்கிறது .
    தேசத் தந்தையாக சிங்கப்பூர் மக்களால் போற்றப்படுகிறார் லீ குவான் யூ . அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் நான்கு பாகங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது . லீ குவான் யூவின் ஆரம்ப வாழ்க்கைத் தொடங்கி அவருடைய கல்வி , அரசியல் நுழைவு , அவருடைய இலக்கு , அதை அடைய அவர் எதிர்கொண்ட சவால்கள் , அவருடைய கம்யூனிச எதிர்ப்பின் பின்னணி , தமிழர்கள் மீது அவர் அன்பு காட்டுவதற்கான காரணம் இவை அனைத்துக்கும் விடை சொல்கிறது இந்தப் புத்தகம் .

    Read more
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    வ.உ.சி.யும் பாரதியும் / Va.U.Si.Yum Bharathiyum

    240 223

    இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் இரு பேராளுமைகள் வட்சியம் பாரதியும் . இருவருமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் வெருசபை போராட்டக் கட்டமான சுநேசி இயக்கத்தின் சூழந்தைவர் ஒே காலகட்டத்தில் ஒரே அரசியல் பின்னணியில் ஒன்றாகயே வெளிச்சத்திற்கு வந்தவர்கள் , 1800 இல் தொடங்கி மறையம்வரை இருவருக்குமிடையே ஆவணப்படுத்துகிறது இந்நூல் . உர்ச்சிப்பாங்கானதொரு நட்பு வளர்ந்து செழித்தது . அந்தக் காவிய பை பாரதியைப் பற்றி உட்.சி , எழுதிய நினைவுக் குறிப்புகளையம் , வட்சியைப் பற்றிப் பாரதி பல்வேறு சமயங்களில் எழுதிய கட்டுரைகள் , கவிதைகள் , நூல் மதிப்புரைகள் , கருத்துப்படங்கள் , விளம்பாங்கள் முதலானவற்றையும் இந்நூல் கொண்டுள்ளது . தமிழ் எழுத்து , சீர்திருக்கம் பற்றி வசிக்கும் பாரதிக்கும் இடையே நடைபெற்ற டானதொரு விவாதமும் முழுமையாக நூலாக்கம் பெறுகின்றது . இருவரின் நட்பையும் , ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன . அக்கால் வரணற்றையும் ஒருங்கே விளக்ரிக்காட்டும் வேறு பலட இவற்றை நேர்த்தியாகத் தேடித தொகுத்துள்ள ஆ.இரா.வேங்கடாசலபதி இவற்றின் பின்னணியை விளக்கும் பதிப்புரையை எழுதியுள்ளார் ,

    Read more