Showing the single result

  • Out Of Stock SAVE 7%
    Read more

    புயலிலே ஒரு தோணி / Puyalilae Oru Tooni

    325 302
    ப . சிங்காரத்தின் ‘ புயலிலே ஒரு தோணி ‘ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது .
    ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல் . வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது . காரணம் அதன் படைப்பு வலு . ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு . இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம் .
    வரலாற்று அடிப்படையிலும் ‘ புயலிலே ஒரு தோணி ‘ தனி இடத்தைப் பெறுகிறது . இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே .
    புதிய களத்தையும் காணாத காலத்தையும் அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘ புயலிலே ஒரு தோணி ‘ .