Showing all 7 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    1801

    500 465
  • Out Of Stock SAVE 7%
    Read more

    காலா பாணி / Kaala Paani

    650 605
    இந்திய விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சரித்திரத்தைத் தொடங்கி வைத்த பெருமை கொண்டது தென்தமிழகம் . வீரம் நிரம்பிய அதன் ரத்தச் சரித்திரத்தின் துவக்கப் புள்ளியாய் இருந்த புலித்தேவன் , வீரபாண்டிய கட்ட பொம்மு , ஊமைத் துரை , மருது பாண்டியர்களைத் தொடர்ந்து சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவனும் தன் உயிரைத் துறந்தார் . தங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்களின் நிலை இதுதான் என்று எச்சரிக்கவே பெரிய உடையணத் தேவனையும் போராளிகள் 72 பேரையும் பினாங்கிற்கு ‘ காலா பாணி ‘ என்றழைக்கப்பட்ட நாடு கடத்தலை ஆயுதமாக்கியது ஆங்கில அரசு .
    சொந்த மண்ணை , மக்களை , உறவுகளைவிட்டு , கண்காணாத தேசத்திற்கு அரசியல் கைதிகளாக அனுப்பப்பட்ட 73 பேரின் இறுதி அத்தியாயம்தான் ‘ காலா பாணி ‘ . 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி , மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்டவுடன் , போராளிகளைக் கைது செய்ததில் தொடங்கி , அவர்களின் இறுதிக் காலம் வரையிலான பதினோரு மாதத் துயர நாள்களை , அந்தக் காலத்திற்கே அழைத்துச்சென்று வாசகர்களையும் அத்துயரத்தினை உணரச் செய்யும் மாயத்தைச் செய்துள்ளார் நாவலாசிரியர் டாக்டர் மு.ராஜேந்திரன் இஆப
  • Out Of Stock SAVE 7%
    Read more

    செயலே சிறந்த சொல் / Seyale Sirandha Soll

    850 791
    இந்திய நிர்வாகவியலின் அடிப்படை கட்டுமானமே ஆட்சிப் பணிதான் . உச்சபட்ச அதிகாரத்துடனும் கவர்ச்சியுடனும் இன்றும் வசீகரித்துக் கொண்டிருக்கும் ஆட்சிப் பணி , அலங்காரமோ , புகழோ நிரம்பியவை மட்டுமல்ல .
    ஒவ்வொரு துறையும் அரசு இயந்திரத்தை சுழலச் செய்வதற்காகவும் மக்களின் வாழ்வியலை மேம்படுத்தவும் மட்டுமே என்ற புரிதலில் , முப்பதாண்டு கால ஆட்சிப் பணி அதிகாரியாக இருக்கும் டாக்டர் மு.ராஜேந்திரன் , இஆப நிர்வகித்த பல்வேறு துறைகளைப் பற்றிய அனுபவப் பகிர்வுகளே , செயலே சிறந்த சொல் .
    தங்களின் அர்ப்பணிப்பான உணர்வுகளுடன் செயலே சிறந்த சொல்லாக இச்சமூகத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்த , செய்து சொண்டிருக்கும் , செய்யப்போகும் அதிகாரிகளுக்கான இடத்தை இந்நூல் நினைவுப்படுத்திக் கொண்டிருக்கும் .
  • SAVE 7%
    Add to cart

    மதாம் / Madhaam

    400 372
    இந்திய தாய்க்கும் , ஐரோப்பிய தந்தைக்கும் பிறந்தவர் மதாம் . பிரெஞ்சிந்திய கம்பெனியின் கவர்னராக 12 ஆண்டுகள் ஆட்சிசெய்த துயூப்ளேவின் மனைவி . பிரெஞ்சிந்தியாவின் நிழல் ஆட்சியாளராகக் கோலோச்சியவர் .
    மதாம் செய்த லஞ்ச லாவண்யங்களாலும் , ஏசுசபை பாதிரிகளோடு சேர்ந்து அவர் மேற்கொண்ட மதநடவடிக்கைகளாலும் இந்தியா முழுவதையும் பிரெஞ்சுக்காரர்கள் ஆளும் வாய்ப்பு பறிபோனது . ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஆட்சியாளர்களாக மாறியதற்கு மதாம் . ஒருவிதத்தில் காரணமானார் .
    துயூப்ளே கவர்னராகப் பதவியேற்க கப்பலில் வந்திறங்கியதில் தொடங்கி , பதவி பறிபோய் , குற்றவாளியாகப் பிரான்சுக்குக் கப்பலில் ஏற்றப்படும் வரையிலான காலத்தை நாவலாக்கியிருக்கிறார் டாக்டர் மு.ராஜேந்திரன்
  • SAVE 7%
    Add to cart

    யானைகளின் கடைசி தேசம் / Yaanaigalin Kadaisi Dhesam

    150 140
    சீனாவுக்கான வணிகப் பாதையில் இருப்பதால் எப்பொழுதுமே வணிக முக்கியத்துவத்துடன் இருக்கும் தென் கிழக்காசிய நாடு இந்தோனேசியா . பதினோறாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் மேலாதிக்கம் செய்த மண்ணிலேயே , 18 – ஆம் நூற்றாண்டில் கூலிகளாகத் தமிழர்கள் வாழ நேர்ந்த அவலம் நிகழ்ந்த தேசம் .
    சிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையணத் தேவர் நாடு கடத்தப்பட்டு , சிறை வைக்கப்பட்டிருந்த நாடு . கலையெழில் நிரம்பிய இந்து , பௌத்தக் கோயில்கள் நிரம்பிய தீவு . ஒரே நேரத்தில் பெருமிதமும் துயரமும் பெருகச் செய்யும் பதினாறாயிரம் தீவுகள் கொண்ட தேசமான இந்தோனேசியா பற்றிய பயண அனுபவங்களைப் பேசும் நூல் , ‘ யானைகளின் கடைசி தேசம் . ‘ இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர் மு.ராஜேந்திரனின் இந்தோனேசியப் பயண அனுபவங்கள் , வரலாற்றைத் தேடி அறியும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால் , பயணக் கட்டுரைகளுக்கானப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன .
  • SAVE 7%
    Add to cart

    வடகரை / Vadakarai

    450 419
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வெயில் தேசத்தில் வெள்ளையர்கள் / Veyil Dhesathil Velliyargal

    250 233
    இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வாழ்வைப் பற்றி அவர்களே புத்தகங்களாக , நாட்குறிப்புகளாக , கடிதங்களாக , அரசாங்கச் செய்திப் பரிவர்த்தனைகளாக எழுதியிருக்கிறார்கள் . அவைகள் நூலகங்களின் கவனிக்கப்படாத இடுக்குகளில் உறங்கிக்கொண்டிருக்கின்றன . அவைகளை நூற்றாண்டு கால உறக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து வந்திருக்கிறேன் .
    ஆங்கிலேயர்களின் வாழ்வை , அவர்கள் சந்தித்த சிக்கல்களைத் தமிழ் வாசகர்களுக்கு விளக்க விரும்பியதன் விளைவு இந்த நூல் .
    ஆங்கிலேயர்களைப் பற்றி தமது பாடப் புத்தகங்களில் , பொதுப் பத்தியில் உள்ள கற்பிதங்களை இந்தப் பதிவுகள் மாற்றக்கூடும் .