Showing the single result

  • SAVE 7%
    Add to cart

    பாரிஜாத் / Paarijaat

    1,150 1,070
    இப்புதினம் ஒருகாலக்கண்ணாடி என்றால் அதுமிகையன்று . காதலர்கள் பார்வையில் இது ஒருகாதல் காவியம் . வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் இது ஒரு வரலாற்றுப் பதிவு . சமயப் பற்றாளர்களின் பார்வையில் இது ஒரு வழிகாட்டும் நூல் . கதாநாயகன் ரோஹன் மற்றும் கதாநாயகி ரூஹியின் மனக்குமுறல்கள் , சோகங்கள் , ஏக்கங்கள் மற்றும் போராட்டங்கள் இவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் பாங்கு , நம்மையும் அவர்களோடு சேர்ந்து அவ்வுணர்ச்சி ஓட்டங்களில் ஒன்றிடச் செய்கிறது .
    இந்துகலாச்சாரம் , விழாக்கள் , இஸ்லாமியப் பண்டிகைகள் என்று எல்லா வற்றையும் மிகவும் அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர் . இப்புதினத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆங்காங்கே கதையின் ஓட்டத்திற்கேற்றவாறு கவிதைகளையும் , கிராமியப் பாடல்களையும் இணைத்திருக்கும் அழகு , படிப்பவருக்கு ஓர் ஆனந்த அனுபவத்தைக் கொடுக்கும் .
    நாசிரா ஷர்மா : இவர் ஒருபுகழ்பெற்ற எழுத்தாளர் மட்டுமன்றி , பன்முகத் திறமை வாய்ந்தவர் . பன்மொழிப் புலவரும் கூட . ஹிந்தி , பார்ஸி , அரபி , உருதபோன்ற பல மொழிகளும் அறிந்தவர் . இவருடைய சிந்தனைகளும் எண்ணங்களும் வேறுபட்ட கலாச்சாரங்களைப் பற்றி எழுதும்போது அதனுள்ளே புகுந்து , காலம் கடந்த உண்மைகளை ஆணித்தரமாக வெளிப்படுத்தியிருப்பது வெகுசிறப்பு .
    டி . சாய்சுப்புலட்சுமி : இந்நூலை மொழியாக்கம் செய்தவர் . இதற்கு முன்பு சாகித்திய அகாதெமியின் ” இந்திய இலக்கியச் சிற்பிகள் ” வரிசையில் பீஷ்ம சாஹ்னியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர் . எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் ஹிந்தித் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர் . இவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல வார , மாதநாளிதழ்களில் வெளியாகி , சிலகதைகள் விருதுகளையும் பெற்றிருக்கின்றன .