Showing 209–224 of 1501 results
-
Read more
இரண்டாம் உலகப் போர் / Irandam Ulaga Por
₹325₹302மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை , குரூரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப் போர் . உயிரிழப்பு , அறுபது மில்லியன் முதல் எழுபது மில்லியன் வரை . போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் ஆசியா , அமெரிக்கா , ஆப்பிரிக்கா என்று பரவி கிட்டத்தட்ட உலகம் முழுவதையும் உலுக்கியெடுத்தது .சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர் . சிலருக்குத் தற்காப்பு யுத்தம் . சிலருக்கு பழிவாங்கல் . சிலருக்கு விடுதலைப் போர் . இன்னும் சிலருக்கு , இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம் . ஹிட்லரோடு தொடங்கி ஹிட்லரோடு முடிந்துவிட்ட போர் அல்ல இது . திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல . மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு , தெளிவாகத் திட்டமிடப்பட்டு , தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம் .அரசாங்கங்கள் சரிந்தன . புதிய தேசங்கள் உருவாகின . உலக வரைபடம் மாறியது . இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இந்த ஆட்சி நீடித்திருக்கும் என்று சொன்ன ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் .அரசியல் , சமூக , வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து , அலசுகிறார் மருதன் . -
Read more
இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு (1778-1792) / Irandaam Veeranayakkar Naatkurippu (1778-1792)
₹395₹367பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792 வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும்பினியாரின் சத்திர நீதிமன்றக் காவல்துறையில் ‘ இரண்டாவது நயினார் ‘ என்ற பொறுப்பான பதவி வகித்த வீராநாய்க்கர் எழுதிய நாட்குறிப்பு – சரித்திரமாக அக்காலத்து வாழ்வுமுறைகளையும் தமிழ்நாடு , ஆந்திரம் , கர்நாடகம் , மகாராட்டிரம் , வங்காளம் ஆகியவற்றிற்கிடையே நிலவிவந்த உறவு , பகை , பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் இவர்களிடம் கொண்டிருந்த உறவையும் பகையையும் படம்பிடித்துக் காட்டுகிறது .ஐதர் அலி ஆட்சி , திப்பு சுல்தான் ஆட்சி , பிரெஞ்சுப் புரட்சிக்கு விளக்கம் , புதுவை மக்களின் எழுச்சி , தென்னிந்திய வரலாறு தமிழ் வரலாற்றின் இணைப்பு , ஐரோப்பிய வரலாற்றின் பாதிப்பு பற்றிய விளக்கங்களை உள்ளடக்கியது ‘ இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு ‘ .தி.நாச்சிமுத்து -
Read more
இராஜராஜசோழன் / Rajaraja Chozan
₹260₹242இராஜராஜ சோழன் பிராமண ஆதரவாளர் , மக்களிடம் தீண்டாமையைப் புகுத்தினார் ; தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பிடுங்கி பிராமணர்களுக்குக் கொடுத்தார் ; கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் இந்தியைப் பயன்படுத்தினார் … என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மையா ?இராஜராஜ சோழன் , அடிமைகளை வைத்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார் ; கோவில் விமானத்தின் சிகரம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது ; கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது ; கோவிலில் உள்ள நந்தி சிலை வளர்கிறது ; விதை நெல்லை கலசத்தில் வைத்துப் பாதுகாக்கவே உயரமான கோபுரத்தைக் கட்டினார் , கோவிலில் சமஸ்கிருதத்தை அனுமதித்தார் ; தேவதாசி முறையை உருவாக்கினார் … என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றனவா ?• தமிழக வரலாறு குறித்த பல தவறான தகவல்கள் பொது வெளியில் வருகின்றன . தமிழ்ச் சமூகம் அதையெல்லாம் நம்பவும் தொடங்குகிறது ! .எது உண்மை ? எது பொய் ? சோழர் கால கல்வெட்டுகள் சொல்லும் உண்மை என்ன ? இந்த நூல் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறது .