Showing 97–112 of 1501 results
-
SAVE 7%
-
SAVE 7%
அரசியல் சிந்தனையாளர் புத்தர் / Arasiyal Sinthannaiyalar Buddhar
₹350₹326பௌத்தம் ஒரு மதமல்ல , ஓர் அரசியல் சிந்தனை . புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர் ; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார் ‘–காஞ்ச அய்லய்யாஇன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன ; அவற்றைப் பின்பற்றவும் செய்தன . இருக்கைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் விதிகள் இருந்தன ; தீர்மானங்கள் கொண்டுவருவது குறித்தும் , தீர்மானங்கள் குறித்தும் , குறைவெண் வரம்பு , கொறடா , வாக்குகள் எண்ணுதல் , வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தல் , ஒருவர்மீது கண்டன தீர்மானம் கொண்டுவருதல் , ஒழுங்குமுறைப்படுத்துதல் , தீர்ப்பு வழங்குதல் போன்ற அனைத்திற்கும் விதிகள் இருந்தன . எனினும் , ஒருவரது பொருளாதார , சமுதாய , அரசியல் சுதந்திரத்தின் நடைமுறைச் செயல்பாட்டில்தான் பௌத்தத்தின் சாரம் இருக்கிறது . ஜனநாயகத்தின் வழிகாட்டியாகப் புத்தர் இருந்தார் . சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் குறித்து தீவிரமாக அவர் பேசினார் ‘-அம்பேத்கர் , அரசியல் நிர்ணய சபை உரையில் , -
SAVE 7%
-
SAVE 7%
அராபியச் சேரமான் / Arabiya Seramaan
₹700₹651முன்னுரை தென்னாட்டில் இருந்த அரச வம்சங்களைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் நிறையவே எழுதிவைத்திருக்கிறார்கள் சேரர் , சோழர் , பாண்டியர் , பல்லவர் , சிங்களர் , சாளுக்கியர் , ராஷ்டிர கூடர் , விஜயநகரத்தவர் , நாயக்கர்கள் , முகமதிய மன்னர்கள் என பல அரச வம்சங்களைப் பற்றி வரலாறுகளைப் படைத்த அப்பெருமக்கள் சேரர் வரலாற்றைப் பொறுத்தவரை பெரும் குறையை வைத்து விட்டனர் . அது இன்றளவும் தொடர்கிறது . சேரமன்னர்கள் வரலாறு என்று அறிஞர்கள் எழுதிவைத் திருப்பதெல்லாம் சங்ககாலச் சேரமன்னர்களைப் பற்றி மட்டும் தான் . களப்பிரர்கள் தென்னகத்தைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள் . கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முடிவில் அது மீட்கப்பட்டது . சேர நாடும் மீட்கப்பட்டது . அந்தத் தகவல் மட்டுமே வரலாற்றில் உள்ளதே தவிர அக்காலகட்டம் முதல் சேர நாட்டை யார் யார் ஆண்டார்கள் என்ற தொடர்ச்சியான வரலாறு எழுதப்படவில்லை . ஒரு சில சேர மன்னர்களைப் பற்றிச் சோழர் வரலாற்றிலும் பாண்டியர் வரலாற்றிலும் காணப்படுகிறதே தவிர கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் தொடர்ச்சியான சேர மன்னர்களின் வம்சாவளியும் வரலாறும் கிடைக்கவில்லை . உரிய ஆதாரங்கள் சரிவரக் கிடைக்கப் பெறாததால் இக்காலகட்டத்தில் அரசு புரிந்த சேர மன்னர்களைப் பற்றி ஊகம் தான் செய்ய வேண்டியிருக்கிறது . சேரவரலாற்றின் இடைப்பட்ட காலத்தில் பெருமாள் ‘ என்ற பட்டத்துடன் இருபத்து ஐந்து மன்னர்கள் ஆண்டதாக டாக்டர் . கே.கே. பிள்ளை அவர்கள் தனது தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடுகிறார் . அவர்களில் இருவரைப் பற்றிய விவரங்கள் இருக்கின்றன . ஒருவர் சேர நாட்டை ஆண்ட போதே அரியணையைத் துறந்த சிவநேசச் செல்வரான சேரமான் பெருமாள் நாயனார் .மற்றொருவர் சேர நாட்டை ஆண்ட போதே அரியணையைத் துறந்து திருமாலடியாரான சேரமான் பெருமாள் குலசேகர ஆழ்வார் . இவ்விருவரைப் பற்றி மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப் பட்டுள்ளன . சேரமான் பெருமாள் முதலில் ஆண்டு அவருக்குப் பின் குலசேகர் ஆண்டார் எனவும் , குலசேகரர் முதலில் ஆண்டு அவருக்குப் பின் சேரமான் பெருமாள் ( நாயனார் ) ஆண்டார் எனவும் கூறப்படுகின்றன . இது போதாதென்று இன்னொரு சேரமான் பெருமாள் சேர நாட்டை ஆண்டார் என்று சில செய்திகள் கூறுகின்றன . இவரைப் பற்றி இஸ்லாமிய எழுத்தாளர்கள் சில ஆதாரங்களைக் காட்டுகிறார்கள் . இப்படி இடைக்காலச் சேரர்களைப் பற்றி உறுதியாகவும் ஆதாரபூர்வமாகவும் தமிழ் நாட்டு சரித்திர நூல்கள் கூறாத நிலையில் இஸ்லாமியர்கள் சுட்டிக்காட்டும் ஆதாரங்களையும் எனது கற்பனையையும் சேர்த்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது . அதில் விளைந்தவன் தான் சேரமான் பெருமாளாகிய பாஸ்கர ரவிவர்மன் . இவன் அரபு நாட்டிற்குச் சென்று நபிகள் பெருமானைச் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவினான் என்று இஸ்லாமிய நூல்கள் சொல்லும் போது தமிழ் நாட்டு வரலாற்று நூல்களோ உறுதியாகச் சொல்லாமல் நழுவிச் செல்கின்றன . இந்த மன்னனைப் பற்றிய விவரங்கள் பிற்காலத்தில் கிடைக்கலாம் . சரித்திரமே கூட அவ்வப்போது கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு மாற்றி எழுதப்படுகின்றது . அதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம் . உறுதியான ஆதாரம் கிடைக்கும் வரை ஊகமும் கற்பனையும் தான் வரலாறாக இருக்கும் . நபி அவர்களைச் சந்தித்த சேரமான் பாஸ்கர ரவி வர்மன் தான் என்று கதையை அமைப்பதற்காக அவனது காலத்தை நபி அவர்களின் காலமாக மாற்றிக் கொண்டேன் . இதை வரலாற்று நாவலாகக் கருதாமல் கற்பனைக் கதை என்று கருதினாலும் எனக்கு உடன்பாடு தான் . ஆதாரங்கள் கிடைக்கும் போது இது கற்பனையா வரலாறா என்பது தெரிந்துவிடும் . இந்தச் சேரமானைப் பற்றி ஏற்கனவே இரண்டு நாவல்கள் வந்திருந்தாலும் அவை சேர நாட்டைப் பற்றி மட்டுமே சொல்லுவதால் எனக்குத் திருப்தியாக இல்லை . எனவே நான் முகமது நபிகள் பற்றியும் அரபு நாட்டில் உண்டான அவரது எழுச்சி பற்றியும் சொல்ல விரும்பினேன் . எனவே நாவலின் முதல் பாகம் அரபு நாடு பற்றியும் இரண்டாம் பாகம் சேர நாடு பற்றியும் கூறுகிறது . இது முகம்மது நபி அவர்களின் வரலாற்று நூல் அல்ல . அவரது வரலாற்றைத் தழுவி நாவலுக்கேற்ப அமைத்திருக்கிறேன் . அவரைப்பற்றி உயர்வான விஷயங்களையே சொல்லியிருக்கிறேன் . தவறு இருக்குமானால் இஸ்லாமிய நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும் . திருத்தங்களைச் சொன்னால் அடுத்த பதிப்பில் ஏற்கப்படும் . இந்த நூலை எழுதியதால் திருக்குர் ஆன் முதல் நபி அவர்களைப் பற்றிய பல நூல்களை வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது தான் எனது முதற்பயன் . இந்த நாவலில் இடம் பெறும் வேத சாஸ்திர விஷயங்கள் சம்பந்தமாக வேத சாஸ்திர விற்பன்னர்கள் பலர் எனக்கு உதவினார்கள் . அவர்களில் இராமாயணம் ஸ்ரீநிவாசன் அவர்கள் மிகவும் முக்கியமானவர் . அவருக்கு என் முதல் நன்றி . இந்த நாவலுக்கு உரிய குறிப்புகளை வலைத்தளம் மூலம் பெற்று உதவிய திருடிவி.ஜகன்னாதன் , டிவி.ரவி , டிவி கிருஷ்ணப் பிரசாத் , திரு . சுந்தர் அவர்களுக்கும் சைதாப்பேட்டை மகாத்மா காந்தி நூலகச் செயலாளர் பெரியவர் திரு . மகாலிங்கம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி . இந்த நாவலுக்கு சேரநாடு சம்மந்தமாகப் பல்வேறு குறிப்புகளைத் தந்து உதவிய எனது சகோதரர் டிவி . கோபால் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி . இந்நூலுக்கு பிழைதிருத்தங்களைச் செய்து உதவிய வி.கே.எம் வித்யாலயாவின் முதல்வர் திருமதி . ராதா முரளி அவர்களுக்கு நன்றி . இந்த நாவலை ஈடுபாட்டுடன் தயாரித்து வெளியிட்ட சீதை பதிப்பகத்தாருக்கு என் அன்பு கலந்த நன்றி . வழக்கம் போலவே இந்நாவலில் நாவலுக்குரிய அனைத்து அம்சங்களையும் பாரபட்சமின்றிக் கொடுத்திருக்கிறேன் . மேலே கூறிய எல்லாவற்றையும் படித்து இன்புறக் கூடியவர்கள் வாசகப் பெருமக்கள் தான் . அவர்களுக்குக் கோடான கோடி நன்றி . மற்றபடி – யாவுமே பகவான் ரமணரின் அருளே அன்றி வேறில்லை . இறைவா ! என்னிடமிருந்து என்னைக் காப்பாற்று . மற்றவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் .– உதயணன் -
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 8%
-
SAVE 7%
-
SAVE 7%
அரூபத்தின் நடனம் / Arupathin Nadanam
₹350₹326காஸபிளங்கா படத்தை எப்போதும் பார்த்தாலும் . பழைய போட்டோ ஆல்பத்தைத் திரும்பப் பார்க்கும்போது ஏற்படும் கிளர்ச்சியும் சந்தோஷமும் உருவாகிறது . சினிமா நமக்குள் ஏற்படுத்தும் காட்சிப்படிமங்களும் உணர்வுகளும் மறக்கமுடியாதவை .1930 களின் கறுப்பு வெள்ளை படங்களில் துவங்கி மும்பை திரைப்படவிழாவில் திரையிட்ட ஈப் அலே ஒ வரை பல்வேறு அயல்மொழித் திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன .நிஜமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் மனித உறவுகளையும் திரையில் பதிவு செய்த உண்மையின் கவிஞன் எனத் தன்னை அழைக்க வேண்டும் என்று சொல்கிறார் புகழ்பெற்ற இயக்குநர் விட்டோரியோ டி சிகா . அது சிறந்த இயக்குநர்கள் அனைவருக்கும் பொதுவான வாசகமே . -
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 8%
-
SAVE 7%