Showing 1457–1472 of 1501 results
-
Read more
வேதாளம் சொன்ன கதை / Veetaalam Conna Katai
₹450₹419வேதாளம் சொன்ன கதை ‘ யுவன் சந்திரசேகரின் எட்டாவது நாவல் .இவரது நாவல்களுக்குப் பொது இலக்கணம் உண்டு . அவை சுவாரஸ்யமானவை ; எனினும் நேர்கோட்டில் நிகழாதவை . நாவல் களம் அனேகமாக ஒன்றுதான் . ஆனால் கதைக்கேற்ப மாறும் வண்ணம் கொண்டது . கதைமாந்தரில் பெரும்பாலோர் முன்பே அறிமுகமானவர்கள் ; எனினும் நிகழ்வுகளுக்கேற்ற விசித்திரப் போக்குகளை மேற்கொள்பவர்கள் . கூறுமுறை யதார்த்தவாதமாகத் தென்படும்போதே அதைக் கடந்து முன்னகரும் இயல்பு கொண்டது . இயல்பானது என்று உணரும்போதே அதீதமாகும் மொழி . ஒரு கதை என்று உள்ளே புகும்போதே ஆயிரம் கதவுகளாகத் திறந்து பல கதைவெளிகளுக்கு இட்டுச்செல்லும் எழுத்து வன்மை ,மேற்சொன்ன எல்லா இலக்கணங்களும் பொருந்தியிருக்கும் நிலையிலேயே புதிதான ஒன்றை , புதிரான ஒன்றை உள்ளடக்கியிருக்கிறது இந்நாவல் . அது என்ன என்ற கேள்விக்குப் பதிலே ‘ வேதாளம் சொல்லும் கதை , ‘ -
Read more
வேலூர்ப் புரட்சி 1806 / Vellore Puratchi 1806
₹325₹3021806 ஜூலை 10. அதிகாலை இரண்டு மணி . வேலூர்க் கோட்டை . ஏறத்தாழ 500 இந்தியப் படை வீரர்கள் அதன் ஐரோப்பியர் குடியிருப்புக்குள் நுழைந்து ஏராளமான வெள்ளை இன அதிகாரிகளையும் போர்வீரர்களையும் சுட்டுக் கொன்றனர் . கர்னல் ராபர்ட் கில்லெஸ்பி என்ற தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் படை வெளியூரிலிருந்து வரும்வரை அவர்களது கிளர்ச்சி எந்த எதிர்ப்புமில்லாமல் நீடித்தது . பின்னர் நடந்த கடும் மோதலில் எண்ணற்ற இந்தியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர் . தப்பியோடிய நூற்றுக்கணக்கானோரை ஆங்கிலப் படையினர் விரட்டிக் கொன்றனர் . கைது செய்யப்பட்டவர்களை இராணுவ நீதிமன்றம் விசாரித்துத் தண்டித்தது . 1806 இல் நடந்த இந்நிகழ்வை வேலூர்ப் படுகொலை , வேலூர்க் கலகம் , வேலூர் எழுச்சி , வேலூர்க் கிளர்ச்சி , வேலூர்ப் புரட்சி எனப் பலவாறு வரலாற்றறிஞர்கள் வர்ணித்துள்ளனர் . வேலூர்க் கிளர்ச்சிக்கான காரணங்கள் , நடந்த நிகழ்வுகள் , நிகழ்வுகளுக்குப்பின் கம்பெனி அரசு எடுத்த நடவடிக்கைகள் , அவற்றின் விளைவுகள் , முதலானவற்றை இந்நூல் ஆய்வு செய்கிறது . வேலூர் நிகழ்வுகள் எவ்வாறு தென்னிந்தியாவின் பிற பகுதிகளிலும் எதிரொலித்தது என்பதையும் விவரிக்கிறது . ‘ வேலூர்ப் புரட்சி ‘ முதல் இந்தியச் சுதந்திரப் போராகக் கருதப்படும் 1857 ஆம் ஆண்டின் இந்நூல் நிறுவுகிறது . பெரும் கிளர்ச்சிக்குக் கட்டியங்கூறுவதையும் பிரிட்டிஷ் நூலகம் ( லண்டன் ) , ஸ்காட்லாந்து தேசிய ஆவணக்காப்பகம் ( எடின்பரோ ) , தமிழ்நாடு ஆவணக்காப்பகம் , இந்திய தேசிய ஆவணக்காப்பகம் முதலானவற்றிலிருந்து திரட்டிய ஆவணங்களிலிருந்து இந்தியக் கண்ணோட்டத்தில் இந்நூலை எழுதியுள்ளார் கா.அ. மணிக்குமார் .