வெள்ளையர்கள் கொடுப்பவர்களாகவும் கருப்பர்கள் பெற்றுக் கொள்பவர்களாகவும் இருக்கும் நிலைமை ஒழிந்து இருவரும் சம பங்காளிகளாக இருக்கும் அமைப்புக்காக அமெரிக்க கருப்பினம் போராடிக் கொண்டிருக்கிறது .
குற்றத்தைச் செய்யவைப்பது என்ன ? தன்னை சமூக உறுப்பினன் என உணர்பவனே மனிதன் . ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னைத் தனிமனிதனாக உணர்கிறது . தன் நலத்தை . தன் மகிழ்ச்சியை நாடுகிறது . சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறிச்செல்கிறது . அவ்வண்ணம் மீறிச்செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது . தன்னை வெளிப்படுத்திவிட்ட நிறைவு அது . குற்றத்தின் , தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை . அதனூடாக வெளிப்படும் மனித ஆழத்தை அறிந்துவிட முயல்பவை . ஆகவே மனித அகமீறல்களின் பல தருணங்கள் இந்தக் கதைகளில் உள்ளன . அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் குற்றங்கள் . எத்தனை தொகுத்தாலும் மனிதன் முற்றாக தொகுக்கப்பட முடியாத தனித்தன்மை கொண்டவன் என்பதை இவை கண்டடைகின்றன .