Showing 33–47 of 47 results
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
ராஜராஜ சோழன் / Rajaraja Chozhan
₹150₹140ராஜராஜ சோழனின் ஆட்சி , பொற்காலம் என்று அழைக்கப் படுகிறது . வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத் தவராக கொண்டாடப்படும் அதே சமயம் , மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவு கூரப்படுகிறார் .கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை , மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன . ஆனால் , எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும் , படை வலிமையையும் அவர் பயன்படுத்த வில்லை . போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு , மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார் . எளியோருக்குக் கடன் வழங்கினார் .ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல , மக்கள் நலப் பணிகளும் அதிகம் . மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது . காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது . கலை , ஆட்சி முறை , சமயம் , இலக்கியம் , பொருளாதாரம் , பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம் . அந்த வகையில் , தென்னிந்தியாவில் மட்டுமல்ல , இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான் .ச.ந. கண்ணனின் இந்தப் புத்தகம் , பிற்காலச் சோழர் வரலாற்றில் ராஜராஜனின் தனிச்சிறப்பான பங்களிப்பை , அதன் சமூக , அரசியல் முக்கியத்துவத்தை விரிவாக ஆராய்கிறது . -
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் / Many faces of kashmiri nationalism
₹480₹446கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்களை ஆழமாக விவரிக்கும் நந்திதா ஹக்ஸரின் இந்த நூல் கஷ்மீரிகளை , கஷ்மீர் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள , கஷ்மீரிகளின் அர்த்தமுள்ள நியாயங்களை உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டு நல்ல தீர்வுகளை சிந்திக்க நம்மை வற்புறுத்துகிறது .இந்த நூல் கஷ்மீரி தேசியத்தின் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வரலாற்றின் தடயங்களை பனிப்போர் காலங்களில் அரசியலில் ஈடுபாடுகொண்ட கம்யூனிச தொழிற்சங்கத் தலைவரான கஷ்மீரி பண்டிதர் சம்பத் பிரகாஷ் மற்றும் கஷ்மீரி முஸ்லீம் அஃப்ஸல் குரு ஆகிய இரண்டு மனிதர்களின் வாழ்க்கை மூலமாகக் கண்டறிகிறது . பனிப்போர் முடிந்து , சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து , பயங்கரவாதத்தின் மீதான போர் துவங்கிய காலகட்டத்தில் அஃப்ஸல் குரு கஷ்மீர் கிளர்ச்சியின் துவக்கத்தில் அரசியல்ரீதியாக ஈடுபாடுகொண்டவர் . இந்தவகையில் இன்னும் பலரது கதைகளும் இதில் பின்னிப்பிணைந்துள்ளன .இந்திய – கஷ்மீர் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கின்ற மதவெறி உணர்வுகள் இந்தத் துணைக்கண்டத்தையே நிம்மதியிழக்கச் செய்து வருகின்றன . மதவெறியும் , தீவிரவாதமும் – அது பெரும்பான்மையோ அல்லது சிறுபான்மையோ மக்களின் ஒற்றுமைக்கு எல்லையில்லா தீங்குகளை ஏற்படுத்தி வருகின்றன . இவை அனைத்தையும் தனக்கே உரிய அனுபவத்தோடும் , லாவகத்தோடும் விவரிக்கிறார் நந்திதா ஹக்ஸர் . -
SAVE 7%
-
SAVE 7%
திப்புசுல்தான் / History of Tipu Sultan
₹600₹558இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில் , முதல் பத்தியில் , முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர் , திப்புவுடையது . கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை , மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு , இந்நூல் மூலம் சாத்தியப் பட்டிருக்கின்றது . அதேவேளையில் , திப்புவின் அரசாங்கமும் , அதை அவர் நடத்திய விதமும் , அவரது இராணுவமும் , அவர் செய்த சீர்திருத்தங்களும் , மதக் கொள்கைகளும் , தொழிற்துறைக்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளும் , சமூக சமத்துவமும் , அவரது குணாதிசியமும் இன்றைய நிலையிலிருந்து பல படிகள் முன்னிற்கின்றன . பல்வேறு ஆய்வுகளின் மூலம் , திப்புவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதியை , சமூகத்திற்கு தனது பங்களிப்பாக இந்நூல் மூலம் தந்திருக்கும் மொஹிபுல் ஹசன் , கல்கத்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் . முதுபெரும் வரலாற்றாசிரியர் . அலிகார் பல்கலைக்கழகத்திலும் , காஷ்மீர் பல்கலைக்கழகத்திலும் தனது பணியைத் தொடர்ந்தவர் . புதுடெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையை நிறுவியவரும் , அதன் முதல் பேராசிரியரும் ஆவார் .
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
போர்ப் பறவைகள் / Por paravaigal
₹900₹837ஒரு சில நூல்கள்தான் போர்ப் பறவைகள் போல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன . சீன வரலாற்றை உலகெங்கும் கொண்டு சென்ற இந்நூல் சிறந்த பாராட்டுகளைப் பெற்றிருப்பதோடு , மாபெரும் எண்ணிக்கையில் விற்பனையும் ஆகியுள்ளது .ஓர் இராணுவத் தளபதிக்கு ஆசை நாயகியாக ஆக்கப்பட்ட பாட்டி கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தன்னை அர்பணித்துக் கொண்ட அம்மா , மகளான யங் சாங் ஆகிய ஒரே குடும்பத்தில் தோன்றிய மூன்று தலைமுறைப் பெண்மணிகளின் மூலமாக , இந்நூலாசிரியர் யங் சாங் இருபதாம் நூற்றாண்டு சீன வரலாற்றை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் .மயிர்க்கூச்செறிய வைக்கும் ஓர் ஒப்பற்ற படைப்பு இது . இந்நூலின் கதை நகர்ந்த விதம் மறக்கமுடியாத ஒன்றாக மனதில் பதிந்து விட்டது . எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது ஓர் அபூர்வக் காப்பியமாகவே காணப்படுகிறது .போர்ப் பறவைகள் என்னும் இந்நூல் என்னை ஐந்து வயதுக் குழந்தையின் மனநிலைக்குத் தள்ளிவிட்டது . நிலையான சமூக வரலாற்றின் பரந்த எல்லைகளைக் கொண்ட ஒரு குடும்ப வரலாறு இது .மார்ட்டின் ஏமிஸ் இண்டிபெண்டண்ட் ஆன் சண்டேவாழ்க்கையின் வேதனைகளை வெளிப்படுத்திய இந்நூல் என் மனதைத் தொட்டுவிட்டது . ஒரு தேசம் மூளைச்சாவு அடைந்த விவரத்தினை விவரிக்கும் இந்நூல் எப்போதும் என்மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும் .பேலர்ட்சண்டே டைம்ஸ் -
SAVE 7%