Showing all 3 results

  • SAVE 7%
  • SAVE 7%

    காதல் கடிதம் / Kadhal Kaditham

    90 84

    வைக்கம் முகம்மது பஷீரின் அச்சில் வெளியான முதல் நாவல் ‘ காதல் கடிதம் ” . 1943 இல் வெளியானது . ஒரு ‘ தமாஷான கதை ‘ என்று எழுதியவரே குறிப்பிட்டாலும் இது வேடிக்கையான கதை மட்டுமல்ல . எழுதப்பட்ட காலத்தின் சமூகப் பழக்கத்தை என்ளி நகையாடவும் காதலின் சிக்கலைப் பேசவும் காதலர்களின் சாதுரியங்களைப் பேசவும் செய்கிறது . பிற்காலத்தில் பஷீர் எழுதிய படைப்புகளின் ஆதார குணங்கள் இந்தத் தொடக்க கால நாவலிலேயே புலப்படுகின்றன . அநாயாசமாகச் செல்லும் கதையாடல் , தனித்துவமான மொழி , கதாபாத்திரச் சித்தரிப்பில் மறைந்திருக்கும் நுட்பம் ஆகிய இயல்புகள் இந்தப் புனைவை முக்கியமானதாக்குகின்றன . எழுதப்பட்டு முக்கால் நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்பும் வாசிப்புக்கு உகந்ததாகவும் காலத்துக்குப் பொருந்தியதாகவும் இந்த நாவல் நிலைபெற்றிருப்பது பஷீரின் மேதைமையால் மட்டுமே . காலம் பஷீரைக் கடந்து செல்லவில்லை . மாறாக பஷீர் காலத்தைத் தாண்டிச் செல்கிறார் என்பதை ‘ காதல் கடிதம் ’ உறுதிப்படுத்துகிறது .

    Add to cart
  • SAVE 7%