Showing all 2 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இருமுனை / Irumunai

    140 130

    கதையின் பிற்பகுதியில் தோன்றும் கதாப்பாத்திரங்களும் புனைவுகளும் தன் வாலைத் தானே விழுங்கும் பாம்புகளாக முன் கதையினை விழுங்கி உருமாற்றிவிடுவதாக எண்ணினான் . பிரதியின் கதாப்பாத்திரங்களுடன் எதிர்வாதம் செய்து , தலை கனத்து பாதியிலே மூடிவிடுவதுண்டு . ஒவ்வொரு பிரதிக்குள்ளும் எழுதப்படாத பல லட்சம் கதைகள் வௌவால்களாக தொங்கிக் கொண்டிருக்கின்றன . எக்கதைக்கும் முடிவென்பதே இல்லையென்றும் அவ்வாறு முடிக்கப்படும் கதையானது ஆசிரியனுக்கு அக்கணத்தில் தோன்றும் முடிவுதானென்றும் அல்லது முடிக்க முடியாதவொன்றின் தொடக்கம் தானென்றும் அறிந்து கொண்டான் . இன்னும் வாசித்து முடிக்கப்படாத பல கதைகள் அவ்வறையில் சிதறிக்கிடந்தன .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கதீட்ரல் / Cathitral

    220 205

    பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் , கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இக்கதை அறிவைச் சேகரித்துத் தொகுப்பதன் பின்ளிருக்கும் மறைமுகமான அதிகாரம் , அரசியல் ஆகியவற்றையும் கோடிட்டுக் காட்டுகிறது . தனித்துவமான கற்பனைகளைத் திருட்டிற்குப் பலி கொடுத்த ஒருத்தி . பிறரது சிந்தனைகளைத் திருடும் மேற்கத்திய மருத்துவனைத் தடுக்க . தன் வரலாற்றை இழந்த ஒருவனோடு , தனது பால்ய களவுகளைத் தவறவிட்ட கன்னியாஸ்திரியையும் கூட்டுசேர்த்துக்கொண்டு . பூரணமாகக் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்திற்குள் . முழுவதுமாய் எழுதி முடிக்கப்படாத நூலைத் தேடி அலைகிறான் . வழக்கமான நேர்க்கோட்டு விவரிப்பு முறையினின்றும் விலகி உள்ளடுக்குகள் கொண்ட மலரொன்று அலர்வதைப் போல நிதானமாக விரியும் இச் சிறு நாவல் நிறைவானதொரு வாசிப்பு அனுபவத்தை நல்குகிறது . மோகனரங்கன்