Showing 49–64 of 79 results

  • SAVE 7%
    Add to cart

    நவீனன் டைரி / Naveenan Dairy

    240 223
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நாய்கள் / Naikal

    120 112
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நாளும் பொழுதும் / Naalum Pozhuthum

    170 158
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நாவல் பழ இளவரசியின் கதை / Naaval Pazha Ilavarasiyin Kathai

    250 233
    அவர்கள் இருட்டும் முன்பு , காட்டைக் கடந்தாக வேண்டும் . சதுப்பு நிலம் போன்று தரை , கால் உள்வாங்கியது . ஆபத்தான வெளி , சருகுகள் குப்பைகள் மூடி , மண்ணில் முகம் மறைந்து கிடந்தது . அங்கிருந்த மரத்தின் பருத்த கிளையை ஒடித்து எடுத்தான் பெரியவன் . அந்தக் கொம்பால் தரையை ஊன்றித் தடம் பார்த்து முன்னே நடந்தான் . பெரியவன் வைத்த காலடிக்கு மேல் தன் அடியை வைத்து ஜாக்கிரதையாக நடந்து சென்றான் சின்னவன் .
    போட்ட அடுத்த ரெண்டு கல்லும் முல்லைக்காடுதான் . கார்கோடன் , அதன் சந்ததியர் படுத்துக்கிடக்கும் . ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும் . என்னத்துக்கு ஓய்வு என்றால் சண்டை களைப்புதான் . பல காலங்களுக்கு முன்னால் கிருஷ்ணனும் அர்ஜுனனும் அவர்கள் பந்துமித்திரர்களோடு கார்கோடன் வம்சத் தாரோடு சண்டைக்கு வந்தார்கள் . காண்டவ வனம் உள்ளிட்ட பூமியின் பரவலில் சொந்தம் கொண்டாடுவது கிருஷ்ணன் , அர்ஜுனரின் நோக்கமாக இருந்தது . கார்கோடன் , மலையின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு சொன்னான் . இந்த மலை போல் லட்சம் கோடி மலைகள் தேய்ந்து தேய்ந்து மண் ஆன கல்ப கோடி வருஷங்களாக நாங்கள்தான் இங்கே குடி இருக்கிறோம் . அதனால் இது எங்கள் பூமி என்றான் . யாரும் அவன் பேச்சைப் பொருட்படுத்துவதாக இல்லை . சண்டை பல ஊழிகள் தொடர்ந்தது . இன்னும்தான் …
    -நூலிலிருந்து
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நிலவறைக் குறிப்புகள் / Nilavarai Kurippugal

    250 233
    ஒரே வாக்கியத்தில் இந்த நவீனத்தைப் பற்றிச் செல்ல வேண்டுமென்றால் , ‘ இது மனிதஇயல்புகளைப் பற்றிய ஓர் அரிதான ஆவணம் ‘ என்றே கூற வேண்டும் .
    – கோபிகிருஷ்ணன்
  • Out Of Stock SAVE 8%
    Read more

    நிழல்கள் / Nizhalgal

    50 47
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நீலம் / Neelam

    250 233
  • SAVE 7%
    Add to cart

    பச்சைக்கனவு / Patchai Kanavu

    300 279
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பனிமனிதன் / Panimanithan

    250 233
  • SAVE 7%
    Add to cart

    பார்த்தீனியம் / Partheeniyam

    450 419
    அண்மைக்காலத்து வரலாற்றில் இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது . யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது . அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம் . யுத்தம் காதல் வாழ்வை சமூக வாழ்வை அன்பை குடும்ப உறவுகளை சிதைக்கிறது . மொத்தமாக மானுட மேன்மையை யுத்தம் கொல்கிறது . தமிழ்நதியின் இந்தப் பார்த்தீனியம் இந்த உண்மைகளைத்தான் மனம் கசியும் விதமாக ஆற்றல் வாய்ந்த ஆனால் எளிய மொழியில் சொல் கிறது . காதலை , நட்பை , உயிர் கலந்த உறவுகளை , சமூக நேசத் தையும் சீரழித்த , கடந்த முப்பது ஆண்டுக்கால ஈழத் தமிழ்வாழ்வைத் துல்லியமாகச் சித்தரித்துக் கண்முன்னும் நம் மனசாட்சி முன்பும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தமிழ்நதி . உலகத்தின் யுத்தகாலக் கலைப் படைப்புகளில் இந்தப் பார்த்தீனியம் குறிப்பிடத்தகுந்த படைப்பாகப் பல காலம் பேசப்படும் . –
    பிரபஞ்சன்
  • SAVE 7%
    Add to cart

    பித்தப்பூ / Pithapoo

    70 65
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பின்நகர்ந்த காலம் / Pinnagarntha Kaalam

    280 260
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பிரதமன் / Pirathaman

    180 167
    வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத்தேவையாக இருக்கிறது . இது அந்த பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை , நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக . இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக் கொள்கிறேன் . இவற்றை எழுதிய எல்லா கணங்களும் அரியவை , ஆழத்தில் நலுங்கிய நிறைவின்மை ஒன்றை நிகர் செய்துகொண்டவை .
    அதேசமயம் இவையனைத்துமே வெண்முரசுக்கான எதிர் வினைகளும்கூட . அயினிப்புளிக்கறி போல எந்த விதமான பெருமைகளும் தனித்தன்மைகளும் இல்லாத சாதாரண மனிதர்களின் சாதாரணத் தருணங்களின் இனிமையை எழுதும்போது நான் மகாபாரதத்தின் மாமனிதர்களின் பெருந்தருணங்களின் ஓங்கிய துயரையும் இனிமையையும் நிகர்செய்கிறேன் . ஆகவே இவை எனக்கு அணுக்கமானவை . வாசகர்களுக்கும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன் . –
    ஜெயமோகன்
  • SAVE 7%
    Add to cart

    புறப்பாடு / Purappadu

    380 353
    அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது . சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம் . கடிகாரக் காலம் . அது அர்த்தமற்றது . அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப் பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது .
    அதை வெளியே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச் சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே . அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வரிசையை அமைத்து விடுகின்றன . நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன் . அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒன்று தென்படும் . அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டு வருகிறதோ அதை எழுதிச் செல்வேன் . அதன் வழியாக அப்போது அதாவது எழுதும் கணத்தில் ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன் .
    ஜெயமோகன்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மகாபாரதம் / Mahabharatam

    300 279
    பிரபஞ்சனின் ரசனையும் தர்க்க அறிவும் கறாரான மதிப்பாய்வும் சமநிலை கொண்டவை . அபிமன்யுவின் அநியாயமான மரணத்தை எண்ணிக் கசியும் அவர் , பாண்டவர்களின் அத்துமீறல்களைக் கண்டிக்கத் தவறவில்லை . திரௌபதிக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டு குமுறும் அவர் கர்ணனுக்கு ஏற்பட்ட அவமானத்துக்காகவும் தலைகுனிகிறார் . பலராலும் வஞ்சிக்கப்பட்ட கர்ணனை அனுதாபத் துடன் பார்க்கிறார் . அதேசமயம் , கர்ணனின் இழிவான செயல்களைக் கண்டிக்கத் தவறவில்லை . குந்தி , காந்தாரி , மாத்ரி , சத்யபாமா எனப் பெண்களின் பாத்திரங்கள் மீது கூடுதலான அக்கறை எடுத்துக்கொள்கிறார் . பீஷ்மரின் வாழ்வின் வியர்த்தத்தை வெளிப்படுத்துகிறார் . போர் என்பது பொருளற்ற சாகசம் என்பதை மனம் பதைக்கச் சொல்கிறார் . கிருஷ்ணன் என்னும் மாபெரும் புதிரை மிக நுணுக்கமாக ஆராய்கிறார் . கிருஷ்ணனின் ஆளுமையின் வீச்சையும் ஆழத்தையும் புரியவைக்கிறார் . அர்ச்சுனன் , சாத்யகி , அசுவத்தாமன் , குந்தி , பலராமன் முதலான பல ஆளுமைகள் குறித்து இதுவரை அதிகம் பேசப்படாத கோணங்களில் பேசுகிறார் . வியாசரின் படைப்புத் திறனையும் தத்துவப் பார்வையையும் பிரமிப்புடன் பார்க்கிறார் . இந்த நூலைப் படித்தால் மகாபாரதத்தை முதலிலிருந்து கடைசிவரை தெரிந்துகொள்ளலாம் .
    அரவிந்தன்
    இந்து தமிழ் நாளிதழ் – மதிப்புரை .