Showing 97–112 of 142 results
-
Add to cart
நைவேத்யம் / Naivethyam
₹160₹149தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியருகே ஆண்டிபட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர் . தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் இவருக்கும் இடமுண்டு . மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியொலிப்பதைக் கேட்கலாம் .சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர் . இவரது நூல்கள் ஆங்கிலம் , இந்தி , வங்காளம் , பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன .கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் . தற்போது கோவில்பட்டியில் வசித்து வருகிறார் .தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்காக தீப்பெட்டித் தொழிலில் குழந்தை உழைப்பை மையமாகக் கொண்டு ‘ கருவேலம் பூக்கள் ‘ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் . அது தமிழக அரசு விருது பெற்றது . -
Add to cart
புவித் தோன்றலும் மனிதகுல வரலாறும் / Puvi Thondralum Manithakula Varalaarum
₹180₹167புவித் தோன்றலும் , மனிதகுல வரலாறும் ‘ என்ற பொருளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சரியான பொருள் விளக்கம் கிடைக்காமல் தடுமாறிய அறிவியல் உலகின் தீரா குழப்பத்திற்கு தீர்வு சொன்னவர்கள் , ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் முன்னும் மாமேதைகள் மூன்று பேரைத் தவிர வேறு யாரும் இல்லை …முதலாமவர் , சமூக விஞ்ஞானி மாமேதை கார்ல் மார்க்ஸ் .இரண்டாமவர் , உயிரியல் பரிணாம வளர்ச்சியை இவ்வுலகத்திற்குப் பறைசாற்றிய மாமேதை சார்லஸ் டார்வின் .மூன்றாமவர் , எவனும் இவ்வுலகைப் படைக்கவில்லை … இவ்வுலகம் இப்படித்தான் தோன்றியது என ஒட்டுமொத்த மதக் கோட்பாட்டு கட்டுக்கதைகளையும் சுக்குநூறாய் உடைத்தெரிந்த மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் .‘ வர்க்கபேத சமுதாயக் கொடுமைகளுக்கு மாற்றுச் சமுதாயம் இருக்கிறது , அது மனிதகுலத்திற்குள்தான் ஒளிந்திருக்கிறது , உழைப்பைச் சமூகமயமாக்கி , படைப்பைப் பகிர்ந்து கொள்ளும் மனித தர்ம பண்பாட்டைச் சட்டமாக்கினால் , வர்க்கபேத ஏற்றத்தாழ்வு வாழ்க்கைமுறையில் மனித இனத்திற்குள் வறுமையும் துன்பமும் வர வாய்ப்பே இருக்காது ! என்பதை மாமேதை காரல் மார்க்ஸ் கண்டுபிடித்து இந்த உலகுக்கே அறிவித்தார்