Showing 129–144 of 239 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    பிரதமன் / Pirathaman

    180 167
    வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத்தேவையாக இருக்கிறது . இது அந்த பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை , நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக . இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக் கொள்கிறேன் . இவற்றை எழுதிய எல்லா கணங்களும் அரியவை , ஆழத்தில் நலுங்கிய நிறைவின்மை ஒன்றை நிகர் செய்துகொண்டவை .
    அதேசமயம் இவையனைத்துமே வெண்முரசுக்கான எதிர் வினைகளும்கூட . அயினிப்புளிக்கறி போல எந்த விதமான பெருமைகளும் தனித்தன்மைகளும் இல்லாத சாதாரண மனிதர்களின் சாதாரணத் தருணங்களின் இனிமையை எழுதும்போது நான் மகாபாரதத்தின் மாமனிதர்களின் பெருந்தருணங்களின் ஓங்கிய துயரையும் இனிமையையும் நிகர்செய்கிறேன் . ஆகவே இவை எனக்கு அணுக்கமானவை . வாசகர்களுக்கும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன் . –
    ஜெயமோகன்
  • SAVE 7%
    Add to cart

    பீர் கதைகள் / Beer kadhaigal

    125 116
  • SAVE 7%
    Add to cart

    புலி உலவும் தடம் / Puli Ulavum Tatam

    175 163
  • SAVE 7%
    Add to cart

    பூமணி/ poomani

    550 512
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பெர்ஃப்யூம் / Perfume

    120 112
  • SAVE 7%
    Add to cart

    பேரீச்சை / Peerriiccai

    160 149
  • SAVE 7%
    Add to cart

    பொலிவதும் கலைவதும் / Polivathum Kalaivathum

    320 298

    இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை . அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது . முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது . எண்ணுகையில் இனிதாகிறது . இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன . உறவு , பிரிவு , கண்டடைதல் , கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன . எத்தனை எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது . வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை .

  • SAVE 7%
    Add to cart

    போயாக் / Boyak

    150 140
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மகிழம்பு மணம் / Makizampuu Manam

    150 140
    மனித முரண்பாடுகளை உள்வாங்கிக்கொள்வதில் ஜயந்த் காய்கிணியின் பார்வை மாறுபட்டது . சிறிய ஊரிலிருந்து வந்தவரானாலும் , ஜயந்த் நகர வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை கன்னடத்திற்குப் புதியது . கதைகளில் அவருடைய ஈடுபாடு , ஓட்டத்தின் லயம் , எழும் துடிப்பு , எல்லாம் அவருக்கே உரித்தானவை . படிக்கவேண்டும் என்று தூண்டும் அதிசய ஈர்ப்புள்ள எழுத்தாளர் ஜயந்த் ,
    கிரீஷ் கார்னாட்
    புதிய களங்கள் , புதிய மாந்தர்கள் என எல்லா வகைகளிலும் புதியவற்றை நாடிச் செல்லும் விழைவுடையவர் ஜயந்த் காய்கிணி . கூடுவிட்டு கூடு பாய்வது போல ஒவ்வொரு கதையிலும் இவருடைய களங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன . எவ்விதமான முன்திட்டமும் இல்லாமல் எழும் இவருடைய கதைகள் மிகவும் இயல்பாக புதிய சூழல்களுடன் பொருந்திவிடுகின்றன . சாதாரணமாக ஒன்றையடுத்து ஒன்றாக நிகழ்ச்சிகளை அடுக்கிக்கொண்டு போகிற போக்கில் எங்கோ ஒரு கணத்தில் வாழ்க்கையை மதிப்பிடும் ஒரு சொல் அல்லது ஒரு வரி அல்லது ஒரு காட்சி மிகவும் இயல்பான வகையில் அமைந்திருப்பதை வாசகர்கள் உணரமுடியும் . அத்தகு கணங்கள் கதையின் வாசிப்பனுபவத்தைப் பல மடங்காகப் பெருக்கி மனத்தை நிறைக்கின்றன .
    பாவண்ணன்
  • SAVE 7%
    Add to cart

    மந்திரம்மாள் / Mandhirammaal

    100 93
    மேஜர் முருகன் இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் தனது குடும்பத்தினருடன் பல மாநில மக்களுடன் , பல மொழிகளைப் பேசி , பழகிய அனுபவம் பெற்றவர் . பணி என்னவோ பயிற்சி , பாதுகாப்பு , துப்பாக்கி என்று கழிந்தாலும் , எங்கு சென்றாலும் அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களைத்தான் அதிகமும் கண்காணித்திருக்கிறார் . அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களையும் குணாதிசயங்களையும் அக்கறையோடு சேகரித்து எழுத்தாக்க முயன்றிருக்கிறார் .
    இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு , சிறுவயதில் பழகிய மனிதர்கள் , கேட்ட குரல்கள் , பார்த்த சம்பவங்கள் எல்லாம் நினைவில் வந்து , எதையோ இழந்துவிட்ட உணர்வை ஏற்படுத்த , அவற்றையெல்லாம் எழுதாமல் விட்டுவிட்டோமே என்கிற மனஉறுத்தல் தலைதூக்கியிருக்கின்றது . பிறகு , தான் பார்த்தவற்றையும் உணர்ந்தவற்றையும் தனது வாசிப்பு அனுபவத்தைக் கொண்டு , இக்கதைகளைப் படைத்திருக்கிறார் .
    ‘ மந்திரம்மாள் ‘ மேஜர் முருகன் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பு . ஒரு ஆரம்ப சிறுகதைகள் எழுத்தாளருக்கே உரிய தன்மையில் இந்தச் அமைந்திருந்தாலும் , ஒவ்வொரு கதையும் தேர்ந்த எழுத்தாளரைக்கூட மிஞ்சிவிடும் அளவுக்கு கற்பனை வளத்துடன் உள்ளது என்பதை இந்நூலை வாசிக்கும் வாசகர்களும் உணர்வார்கள் .
    மு.வேடியப்பன்
  • SAVE 7%
    Add to cart

    மயில் புராணம் / Mayil Puraanam

    270 251
  • SAVE 7%
    Add to cart

    மரி என்கிற ஆட்டுக்குட்டி / Mari Enkira Aatukutty

    230 214
    மரியை எனக்குத் தெரியும் . அன்புக்கு ஏங்கிய ஆத்மா அவள் . வசதியான குடும்பம் . தெருவில் மூன்று கார்கள் நின்றன . நான்கு வேலைக்காரர்கள் இருந்தார்கள் . வீட்டில் , அம்மா இல்லை . அதாவது குழந்தையிடம் இல்லை . அப்பா , பணம் பண்ணிக் கொண்டிருந்தார் . அம்மாவும் அப்பாவும் தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்று மரி நினைத்தாள் . அவள் உலகை வெறுக்கத் தொடங்கினாள் .
    குழந்தைகள் பெற்றோர்களிடம் , ஆசிரியர்களிடம் , உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் . அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அதுதான் . அது மட்டும்தான் , அதைக்கூட கொடுக்க முடியாத அளவுக்கு மனிதர்கள் மரத்துப் போய்விட்டார்கள் என்பது நம் காலத்து அவலம் .
    – பிரபஞ்சன்
  • SAVE 7%
    Add to cart

    மற்ற மரணம் / Matra Maranam

    120 112
    மேற்கத்திய நாடுகளின் நலிந்த இலக்கிய நுரையீரல்களுக்குப் பிராணவாயு தரும் லத்தீன் அமெரிக்க இலக்கியம் , உலக இலக்கியத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளது .
    அதிகாரபூர்வ உண்மைகளுக்குச் சவால்விடும் சமூக , அரசியல் அநீதிகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் , அல்பமான அதிகாரத்தைக் கிண்டல் செய்யும் , லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் இந்திய கலாச்சாரத் தொடர்பை ஆராயும் , மந்திரத்தோடு விளையாடும் இத்தொகுப்பிலுள்ள கதைகள் , லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் படைப்புகள் .
  • SAVE 7%
    Add to cart

    மலை பூத்தபோது / Malai Pothapothu

    200 186

    இவை கவிதையின் விளிம்பில் நின்றிருக்கும் கதைகள் , கவிதைக்குரிய முடிக்காத சொல்லி தன்மை , உருவாகாத உணர்வுகளாக நின்றிருக்கும் நன்மை , சொல்லாட்சிகள் வழியாக மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை ஆகியவை கொண்டவை இக்கதைகள் . அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கும் ஒரு நுண்ணிய மரபில் இணைப்வைய ஆகவே உணர்வெழுச்சிகளை , வாழ்க்கையின் முழுச்சித்திரங்களை இக்கதைகள் காட்டுவதில்லை . புள்ளகைக்க வைக்கும் , கற்பனை விரியச்செய்யும் , வாழ்க்கையின் முழுமை நோக்கிய பார்வை ஒன்றை அளிக்கும் ஒரு தருணம் . அல்லது உளநிலை மட்டுமே இவற்றில் வெளிப்படுகிறது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    மாயக்குதிரை / Maayakkuthirai

    150 140
    கனிந்து செறிந்த மன முதிர்விலிருந்து , வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன இந்தக் கதைகள் . ஒவ்வொன்றும் தன் சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் நிரந்தரத்தில் துடித்திருக்க , அதனதன் முழுமையில் நம்முள் வாழ்வாகின்றன . இந்தக் கதைகள் , என்னுள் சற்றே அசந்திருந்த , எழுத்தின் வலிமையையும் சாத்தியங்களையும் பற்றிய வியப்பையும் மதிப்பையும் மீண்டும் ஒரு முறை உசுப்பி மலர்த்தியிருக்கின்றன . அந்தளவில் தமிழ்நதிக்கு என் நன்றி . இவை , மொழிகளிடையே கூடுபாய்ந்து மனங்களிலெல்லாம் கூடுகட்ட விழைவதாக உணர்கிறேன் . ”
    யூமா வாசுகி