Showing all 9 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    உலக மக்களின் வரலாறு / A People’s History of the World

    750 698

    நாம் இருபத்தொன்றும் நூற்றாண்டில் நுழைகிற போது , இந்த உலகம் பேராசை கொண்டதாக , ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக , இனவெறி , தேசிய மேலாதிக்கவெறி கொண்டதாக , காட்டுமிராண்டித்தன நடைமுறைகள் கொண்டதாக , பயங்கர யுத்தங்கள் கொண்டதாக இருக்கிறது . — . அரசு தோன்றி , சமூக ஏற்றத்தாழ்வு நிறுவப்படுவதற்கு முன்பு , மக்கள் சிறு அளவில் ரத்த உறவுகள் அடிப்படையிலான சிறு குழுக்காளக வாழ்ந்தனர் . அவற்றின் பொருளாதார வாழ்வின் மையமான நிறுவனங்களில் நிலம் மற்றும் மூலாதாரங்களின் உடைமை கூட்டாக அல்லது பொதுவாக இருந்தது , உணவு விநியோகத்தில் பொதுவாக்கப்பட்ட பண்டமாற்று முறையும் ஒப்பீட்டளவில் சமத்துவ அரசியல் உறவுகளும் இருந்தன … … வேறு சொற்களில் சொல்வதானால் , ஆளுவோரோ ஆளப்படுவோரோ , எழைகளோ பணக்காரர்களோ இல்லாமல் மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர் , ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    சோழர்கள் (1&2) / The Cholas (1&2)

    1,250 1,163
    பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம் . கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே , கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன . யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன . இத்தகு சிறப்புடைய வரலாற்றில் , சோழர்களின் ஆட்சி , ஒரு பொற்காலமாய்த் திகழ்கிறது என்றால் மிகையாகாது .
    சோழர்களைப் பற்றி பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல் , அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது . இத்தகு அருமுயற்சியை இதற்கு முன்னர் வேறு எவரும் மேற்கொண்டதில்லை .
    சோழர் காலத்தின் முழுமையான வரலாறு , சோழப் பேரரசின் ஆட்சி முறை , வரிவிதிப்பு , நிதி , மக்களின் வாழ்க்கை முறை , வாணிபம் , தொழில் , விவசாயம் , நிலஉரிமை , கல்வி , சமயம் , கலை , இலக்கியம் ஆகியவற்றை , பேராசிரியர் சாஸ்திரி அவர்கள் ஆய்ந்தமைந்த சான்றுகளுடன் தக்கமுறையில் படம்பிடித்துக் காட்டுகிறார் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    தமிழ்ப் புலவர் வரலாறு / Tamil Pulavar Varalaru

    55 51
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பண்டைக்கால இந்தியா / Pandaikkala India

    410 381

    திரு . ஆர்.எஸ் . சர்மா பாட்னா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் . இதன் முன்னர் டோரன்டோ மற்றும் டில்லி பல்கலைக்கழகங்களில் மிகச் சிறப்பான முறையில் வரலாற்றுப் பாடம் போதித்துப் பெரும் புகழ்பெற்றவர் . இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் தலைவராகத் திகழ்ந்த நற்பெருமையும் இவரைச் சேரும் . ” பண்டைக்கால இந்தியா ” என்பது அவரது பேனா முனையிலிருந்து உதித்த மிகவும் புகழ்பெற்ற நூல் . பிரபல இந்திய வரலாற்று அறிஞர்களால் , ஆன்றோர்களால் , சான்றோர்களால் பெரிதும் போற்றிப் பாராட்டப்பட்ட இந்த அரிய நூலுக்கு அளிக்கப் பட்டிருந்த அங்கீகாரத்தை இந்திய அரசு 1977 இல் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது . எனினும் தவறு உணரப்பட்டு , 1980 ஆம் ஆண்டில் அந்த அங்கீகாரம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    பேரரசன் அசோகன் / Ashoka

    550 512
    அடர்ந்த காட்டினூடே படர்ந்திருக்கும் செடி கொடிகளை வெட்டி , உள்ளே புதைந்து போய் மறைந்திருக்கும் நகரைக் கண்டு பிடிப்பது போல் சார்ல்ஸ் ஆலன் வரலாற்றால் மறைக்கப்பட்ட மாமன்னன் அசோகரையும் , தன் மக்களின் மகிழ்ச்சி , எங்கும் அமைதி , விலங்குகளுக்கும் கூட உரிமை என்ற பெருநோக்கோடு அவர் புரிந்த பேராட்சியையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் .
    In the Shadow of the Sword நூலின் ஆசிரியர் Tom Holland
    அசோகரது வரலாற்றை சார்ல்ஸ் ஆலன் அதிர்ச்சிகள் நிறைந்த மர்ம நாவலில் மர்மங்களை மொட்டவிழ்ப்பது போல் அவிழ்த்து , மறைந்து போன மன்னனை மீட்டெடுக்கிறார் . தங்களது வழக்கமான வேலைகளின் ஊடே , பலரது மிகவும் துணிச்சலான கண்டுபிடிப்புகள் , அவர்கள் தோண்டியெடுத்த பல சான்றுகள் , சான்றுகளில் மறைந்திருந்த செய்திகளின் பொருள் தேடுதல் இவை எல்லாவற்றையும் தாண்டி , இந்தியாவின் முதல் பெரும் மன்னனின் வரலாற்றை வெளிக் கொண்டு வந்துள்ளார் . இந்த அசோக மன்னனது சக்கரமே இன்றும் நம் நாட்டுக் கொடியில் நடு நாயகமாக வீற்றிருக்கிறது . இந்த நூலை வாசிக்கும் போது ஒரு வரலாற்று நூல் எந்த அளவு நம்மை ஈர்க்கக்கூடியது என்பதும் தெளிவாகிறது . “
    Rediscovery of India ” நூலின் ஆசிரியர் Lord Meghnad Desai
  • SAVE 7%
    Add to cart

    முகலாயர்கள் / Mugalayargal

    640 595
    பாபர் , பானிபட் , அக்பர் , தின் இ – லாஹி , தெய்வீகக் தாஜ்மஹால் , காதல் , ஒளரங்கசீப் , தேஜ் பகதூர் , சிவாஜி , மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம் .
    உண்மையில் அது ஒரு பிரம்மாண்டமான சரித்திர சமுத்திரம் . நாம் இதுவரை பார்க்காத பக்கங்கள் மிக நிறைய ! அத்தனையும் அற்புதம் சுமந்த பக்கங்கள் .
    பல கைக்குட்டை கிராம ராஜ்ஜியங்களாக இருந்த துணைக் கண்டத்தை முதல் முதலில் ஒரே பிரம்மாண்டமான தேசமாக்கும் முயற்சி முகலாயர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது . ஆந்திர எல்லை வரை ஒளரங்கசீப் படையெடுத்திருக்காவிட்டால் இந்தியா ( அன்றைக்கு ஹிந்துஸ்தான் ) உருவாக இன்னும் நாளாகியிருக்கும் ! நமது இன்றைய மதச்சார்பின்மை , அன்றைய அக்பரின் மத நல்லிணக்கத்தின் தொடர்ச்சியே .
    இன்னும் சொல்லலாம் . முகலாயர்களின் முன்னூறு ஆண்டுகால ஆட்சி , நவீன இந்தியாவின் முதல் மாதிரி வடிவம் .
    இந்நூல் பேரரசர்களின் வண்ணமயமான வாழ்வை விவரிப்பதுடன் நின்றுவிடவில்லை . ‘ இந்திய தேசியம் ‘ என்னும் கருத்தாக்கம் தோன்றி , வலுப்பெற்று , எழுந்து கோலோச்சத் தொடங்கிய கதை இதன் அடிநாதமாக இருப்பதே சிறப்பு .
    யூதர்கள் , செங்கிஸ்கான் வரிசையில் முகிலின் மற்றுமொரு வரலாற்று நூல் . முகலாயர்களின் எழுச்சி முதல் வீழ்ச்சி வரை முழுமையாக விவரிக்கும் முதல் தமிழ் புத்தகம் இதுவே . இந்திய சமஸ்தானங்கள் குறித்து முகில் எழுதிய அகம் , புறம் , அந்தப்புரம் வரலாற்றுத் தொடர் , குமுதம் ரிப்போர்ட்டரில் இரு ஆண்டுகள் வெளிவந்து வரவேற்பைப் பெற்றது .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    முற்கால இந்தியா / Murkala India

    850 791
    இந்தப் பெரிய புத்தகம் இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதற்கு அறிமுகமும் , இந்தியா இன்றைய நிலையை எவ்வாறு வந்தடைந்துள்ளது என்ற அடிப்படை வரலாற்றுப் புத்தகமும் மட்டுமல்ல ; சகிப்புத் தன்மையற்றதும் விலக்கும் பண்புடையதுமான இந்து தேசியவாதம் கட்டமைத்திருக்கும் வரலாற்றுப் பொய்மைகளையும் புனைவுகளையும் கட்டுடைத்துக் காட்டுகிறது . இந்நூல் இன்றைய வாசிப்பிற்கு அவசியமான ஒன்று .
    எரிக் ஹாப்ஸ்வாம்
  • SAVE 7%
    Add to cart

    வரலாற்றில் பிராமண நீக்கம் / Varalatril Brahmana Nikkam

    550 512
    வரலாற்றில் பிராமண நீக்கம் … இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒர் பனுவலாக விளங்க முடியும் . அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற , ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சி செய்யாத நூல் – அண்மைக்காலத்தின் முதல் ‘ கீழிருந்து எழும் வரலாறு ‘ .
    கெய்ல் ஓம்வெட்
    முரண்பாடற்ற . நன்கு வாதிக்கின்ற படைப்பு … மனவெழுச்சியுடன் ஒரு எதிர்நிலைப் பார்வைக் கோணத்தை வாதிக்கிறது . அதேசமயம் இசைவிக்கின்ற தன்மை கொண்டது .
    உமா சக்ரவர்த்தி
    இந்தப் புத்தகம் – இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்க்கின்ற . மொழிபெயர்க்க வேண்டிய ஒன்று – புதிய சமூகத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான ‘ நல்ல சிந்தனைகளைத் தேடுவதில் ‘ போராடுகின்றமக்களுக்குப் பெரும் உதவியாக இருக்க இயலும் .
    மெயின்ஸ்ட்ரீம்
    இப்படிப்பட்ட மரபுசாராத வகையிலான படைப்பு இன்று மிகத் தேவையான ஒரு புதிய வகையான செயற்களத்தை அளித்துப் புதிய வகை விவாதங்களுக்கு இட்டுச் சென்று ஆய்வின் திசைக்கு முற்றிலும் ஒரு புதிய திருப்பத்தை அளிக்கக்கூடியது .
    சம்மர்ஹில் : ஐஐஏஸ் மதிப்புரை