Showing all 8 results

  • SAVE 7%
    Add to cart

    அம்பை கதைகள் / Ambai Kataikal

    990 921

    நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவரான அம்பை கடந்த அரைநூற்றாண்டு காலம் எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல் . அதுகாறும் மறுக்கப்பட்ட உலகின் புதிய குரல் அம்பையினுடையது . திரைச்சீலைகளுக்குப் பின்னும் நிலைக்கதவுகளை அடுத்தும் சமையற்கட்டுக்குள்ளும் புழுங்கித் தவித்தவர்களை வரவேற்பறைக்குக் கொண்டுவந்தவர் அம்பை . இந்தக் கதைகள் உறவுகளால் , போராட்டங்களால் , கசப்புகளால் , தனிமைகளால் , அபூர்வமான பரவசங்களால் , விம்மல்களால் , கண்முன் தன் நிறங்களை இழந்து வெளிறும் சமூகத்தவர்களால் , இடர்களை நேர்நின்று எதிர்கொள்ளத் துணிந்தவர்களால் , இன்ன பிறவற்றால் ஆனது . இந்தக் கதைகளில் கதைசொல்லி சிறுமியாக , மாணவியாக , களப்பணியாளராக , வளர்ந்த மகளாக , மத்திமவயதை உடையவளாக , ‘ மௌஸிஜியாக , தீதியாக ‘ பல வயதுகளில் வருகிறாள் . கதைகளுக்குள் ஊடாடி வரும் சங்கீதமும் பெண்களுக்குள் நிகழும் உறவில் வெளிப்படும் இசைமையும் தாளலயத்தோடு வெளிப்பட்டிருக்கிறது . பெரிய அலையாகவும் பிரம்மாண்டமானதாகவும் நுரையாகவும் பின் கூடிவந்து சேர்வதாகவும் பிறகு குலைந்து போகக்கூடியதாகவும் மீண்டும் எழக்கூடியதாகவும் மூழ்கடிக்கக்கூடியதாகவும் தூக்கி எறியக்கூடியதாகவுமான ஆக்கங்களைக் கொண்ட அம்பையின் மொத்த புனைகதைகளின் உலகம் இது

  • SAVE 7%
    Add to cart

    காட்டில் ஒரு மான் / Kaattil Oru Maan

    225 209
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை / Civappuk Kazuttutan Oru Paccaip Paravai

    195 181
    அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது .
    “ அம்பையின் சிறுகதைகளைப் பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சொல்லலாம் . வாழ்வின்மீது கவியும் துன்பங்களையும் தன்மீது கவியக் கூடியவையாகக் கண்டு வருத்தம் கொள்ளும் பெண்மையின் உலகம் . நுட்பமும் கலை அழகும் கொண்டவர் … “
    சுந்தர ராமசாமி