Showing all 2 results

  • SAVE 7%
    Add to cart

    Thamizhnattu Porkalangal /தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்

    200 186

    பண்டைய காலம் முதல் நவீன காலம் வரையிலான தமிழகத்தின்
    கதையைப் போர்களின்மூலம் தெரிந்துகொள்ள உதவும் ஒரு
    வரலாற்று வழிகாட்டி இந்நூல்.

    தலையாலங்கானம், தகடூர், மதுரை, நெல்வேலி, காந்தளூர்ச்
    சாலை, பெருவளநல்லூர், திருப்புறம்பியம் என்று அடுத்தடுத்து
    பல போர்க்களங்கள் நம் முன்னால் விரிகின்றன. நலங்கிள்ளியும்
    நெடுங்கிள்ளியும் நெடுஞ்செழியனும் புலகேசியும் சுந்தரபாண்டியனும் வாளேந்தி
    பாய்கிறார்கள்.

    யானைகளும் குதிரைகளும் மனிதர்களும் மோதிக்கொள்கிறார்கள். குருதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு மன்னர் தோற்கிறார்,
    இன்னொருவர் வெல்கிறார். இந்த வெற்றிகளும் தோல்விகளும்
    தமிழகத்தின் திசைப்போக்கைத் தீர்மானித்திருக்கின்றன. எனவே
    போர்களைக் கூடுதல் கவனத்துடன் ஆராயவேண்டியிருக்கிறது.

    இந்நூலில்புறநானூறு,அகநானூறு, மதுரைக்காஞ்சி,
    நெடுநல்வாடை என்று இலக்கிய ஆதாரங்கள் ஒரு பக்கம்
    அணிவகுக்கின்றன என்றால் கல்வெட்டுகள், செப்பேடுகள் என்று
    வரலாற்றுத் தரவுகள் இன்னொரு பக்கம் பலம் சேர்க்கின்றன.
    சங்க காலம் தொடங்கி ஐரோப்பியரின் வருகைக்குச் சற்று முன்பு
    வரையிலான போர்க்களங்களை நம் கண் முன்னால் சிறப்பாகக்
    காட்சிப்படுத்தியிருக்கிறார் எஸ். கிருஷ்ணன்.

  • SAVE 7%
    Add to cart

    Vijayanagara Perarasu /விஜயநகர பேரரசு

    250 233

    தமிழகத்தைச் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்து தங்கள் முத்திரையை வலுவாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறது விஜயநகரப் பேரரசு. 14ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் உதயமான இந்தப் பேரரசுக்கு மற்ற அரசுகளுக்கு இல்லாத ஒரு பெரும் கடமை இருந்தது. அது, தென்னாட்டைப் பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி.

    நிலையற்ற அரசும் கொந்தளிப்பான தன்மையும் நிலவிய மோசமான சூழலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்தினார்கள் விஜயநகர மன்னர்கள். நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொருளாதார மேன்மை, நீர்ப்பாசனம் என்று தொடங்கி அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்ததன்மூலம் தென்னகத்தை அவர்கள் தலைநிமிரச் செய்தார்கள். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இடைவிடாத போர்களுக்கு நடுவில் இந்தியாவின் வரலாற்றை விஜயநகரப் பேரரசு அழுத்தந்திருத்தமாக மாற்றி எழுதியது.

    விஜயநகரப் பேரரசு எப்படி உருவானது? எந்தெந்த மன்னர்களெல்லாம் ஆண்டனர்? கிருஷ்ணதேவராயர் வகித்த பாத்திரம் எத்தகையது? அவர்களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது? படைபலம் எத்தகையது? கலை, கட்டுமானம், பொருளாதாரம், சமயம் போன்ற துறைகள் எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தன? எஸ். கிருஷ்ணனின் இந்நூல் விஜயநகரப் பேரரசு பற்றிய மிகச் சிறப்பான பருந்துப் பார்வையை அளிக்கிறது.