Showing all 2 results
-
Add to cart
தலைப்பில்லாதவை / Talaippillaatavai
₹550₹512யுவன் சந்திரசேகரின் குறுங்கதைத் தொகுப்பான ‘ மணற்கேணி ‘ 2008 இல் வெளிவந்தது . ஜனரஞ்சக இதழ்களில் பக்க நிரப்பிகளாகப் பயன்படுத்தப்பட்ட குறுங்கதை வடிவத்துக்கு சீரிய இலக்கிய குணத்தை அளித்த நூலாக மணற்கேணியைக் குறிப்பிடலாம் .பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு வெளிவரும் இரண்டாவது குறுங்கதைத் தொகுப்பான ” தலைப்பில்லாதவை ‘ முந்தைய நூலின் தொடர்ச்சியாகவும் , விலகி அடைந்த வளர்ச்சியாகவும் காணப்படுகிறது . வரையறுக்கப்பட்ட பக்க அளவுக்குள் கச்சிதமான சொற்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்ற அளவில் முன்னதன் தொடர்ச்சி . ஒரே பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதைகள் என்பதிலிருந்து மாறுபட்டுப் பல முகங்கள் , பல குரல்கள் கொண்ட கதைகளாக அமைந்திருப்பது விலகல் . முதல் தொகுப்பைவிட அதிகமான எண்ணிக்கையில் கதைகள் என்பது வளர்ச்சி . படிக்க சுவாரசியமானவை , படித்த பின் யோசிக்க வைப்பவை என்பன இரண்டு தொகுப்புகளுக்குமான பொதுமை .ரத்தினச் சுருக்கமான , நயமான வரிகளிலான விவரணை , உரையாடல்களில் குவிமையத்தை விட்டு விலகாத இறுக்கம் , அடிப்படை விவரிப்பின் சுழிக்குள் வாசக மனத்தை ஈர்த்துவிடும் கூறுமுறை – இவை இந்தக் குறுங்கதைகளின் இயல்புகள் . புதிய இலக்கிய வடிவமாகக் குறுங்கதைகள் முன்வைக்கப்படும் இன்று சிறுகதை அளிக்கும் வாசிப்பு அனுபவத்தை வழங்கும் சீரிய முயற்சியாக யுவன் சந்திரசேகரின் கையடக்கக் கதைகளைச் சொல்லலாம் . இந்த வகைமையின் தனித்துவமான முன்னெடுப்பாகவும் இந்தத் தொகுப்பைக் காணலாம் .சுகுமாரன் -
Add to cart
வேதாளம் சொன்ன கதை / Veetaalam Conna Katai
₹450₹419வேதாளம் சொன்ன கதை ‘ யுவன் சந்திரசேகரின் எட்டாவது நாவல் .இவரது நாவல்களுக்குப் பொது இலக்கணம் உண்டு . அவை சுவாரஸ்யமானவை ; எனினும் நேர்கோட்டில் நிகழாதவை . நாவல் களம் அனேகமாக ஒன்றுதான் . ஆனால் கதைக்கேற்ப மாறும் வண்ணம் கொண்டது . கதைமாந்தரில் பெரும்பாலோர் முன்பே அறிமுகமானவர்கள் ; எனினும் நிகழ்வுகளுக்கேற்ற விசித்திரப் போக்குகளை மேற்கொள்பவர்கள் . கூறுமுறை யதார்த்தவாதமாகத் தென்படும்போதே அதைக் கடந்து முன்னகரும் இயல்பு கொண்டது . இயல்பானது என்று உணரும்போதே அதீதமாகும் மொழி . ஒரு கதை என்று உள்ளே புகும்போதே ஆயிரம் கதவுகளாகத் திறந்து பல கதைவெளிகளுக்கு இட்டுச்செல்லும் எழுத்து வன்மை ,மேற்சொன்ன எல்லா இலக்கணங்களும் பொருந்தியிருக்கும் நிலையிலேயே புதிதான ஒன்றை , புதிரான ஒன்றை உள்ளடக்கியிருக்கிறது இந்நாவல் . அது என்ன என்ற கேள்விக்குப் பதிலே ‘ வேதாளம் சொல்லும் கதை , ‘