Showing 1–16 of 50 results

  • SAVE 7%
    Add to cart

    அந்த முகில் இந்த முகில் / Antha Mugil Intha Mugil

    250 233

    இந்தக்கதை நான்அறிந்த மெய்யான ஒரு வாழ்க்கையின் புனைவு வடிவம் . அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை . எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன . நுரைக்காத தருணமே இல்லாத கதை , பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு . அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு . கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது . ஒரு காதல்கதை . இழந்த காதலின்அல்லது இழக்க முடியாத காதலின் கதை .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    அனல் காற்று / Anal Kattru

    160 149
  • Out Of Stock SAVE 7%
    Read more

    அபிப்பிராய சிந்தாமணி / Abippiraya Sinthamani

    900 837

    இந்நூலில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பகடிக் கட்டுரைகள் , நகைச்சுவைச் சித்தரிப்புகள் உள்ளன . இவை வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைக்கொண்டு எளிய வேடிக்கையை முன்வைப்பவை அல்ல . பல கட்டுரைகளில் நுட்பமான மானுடச் சித்திரங்கள் உள்ளன . தத்துவதரிசனங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன . கேலிக்கு ஆளாவது எது என சற்று யோசிக்கும் வாசகர்களுக்குரிய நுட்பமான நகைச்சுவை எழுத்து இது .

  • SAVE 7%
    Add to cart

    ஆனையில்லா சிறுகதைத் தொகுப்பு / Aanai Illa Sirukathai Thogupu

    350 326

    இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை . நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை , நிகழ வாய்ப்பிருந்தவை , நிகழந்தவையும்கூட என்பேன் . பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒருகட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச் செல்கிறார்கள் . அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள் . புத்தம்புதிய ஓர் உலகு . ஒளிமிக்க உலகு . முதுமையில் அவர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள் . என் இளமையைக்கொண்டு நான் சமைத்த இந்த உலகை இனியும் விரிவாக்குவேன் என நினைக்கிறேன் . ஒருவேளை எழுதாமல் போகலாம் . ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்வேன் . இப்போதே எழுதப்படாத பல கதைகள் என்னுள் இருக்கின்றன . இவற்றிலுள்ள கள்ளமற்ற கொண்டாட்டமே இவ்வுலகில் நான் வேண்டுவது . இங்கே மானுடர் வாழவேண்டிய வகை அது

  • SAVE 7%
    Add to cart

    ஆயிரம் ஊற்றுகள் / Ayiram Uttrugal

    210 195

    இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை . அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் சய்கின்றன . மான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை . இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம் . நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம் . வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது . ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே . அவர்களில் பலர் அரசியர் , இந்த கதைகள் வரலாற்றை இன்றைய நவீன ஜனநாயகப் பார்வையில் உருவாக்கிக் காட்டுகின்றன .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இன்றைய காந்தி / Indraya Gandhi

    490 456
    இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் , பின்நவீனத்துவ காலகட்டத்தில் , மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில் , என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது . காந்தியின் வாழ்க்கையையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் அடிப்படைச் சிந்தனைகளையும் குறித்த விரிவான ஒரு பொதுவிவாதம் .
    காந்திமீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஐயங்களையும் இந்நூலில் ஜெயமோகன் விரிவாக ஆராய்கிறார் . காந்தியின் தனிவாழ்க்கையையும் அவரது போராட்டமுறைகளையும் பரிசீலிக்கிறார் . காந்தியப் போராட்டவழிமுறைகள் இன்றைய சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானவை என்றும் காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற இலட்சியத்தின் இன்றைய பெறுமானம் என்ன என்றும் விவாதிக்கிறார் . பல்வேறு வாசகர்களுடனான கேள்விபதிலாக ஆரம்பித்த உரையாடல் இந்நூல் வடிவை அடைந்துள்ளது .
    உலக சிந்தனையில் காந்தி இன்று வகிக்கும் இடம் என்ன என்பதை இந்நூல் இன்றைய இளம் வாசகனுக்குக் காட்டும் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    இரவு / Iravu

    220 205
  • SAVE 7%
    Add to cart

    இரு கலைஞர்கள் / Iru Kalaingargal

    220 205

    இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை . ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல , புனைவுகள் . அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள் . சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள் . அவர்களின் அகம் திகழும் சில கணங்களைத் தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன . இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் . சிறுகதைகள் அதியமானைப் பாடிய ஒளவையாரின் கண்களே நான் கோருவன .

  • SAVE 7%
    Add to cart

    இலக்கியத்தின் நுழைவாயிலில் / Ilakiyathin Nuzhaivaiyil

    160 149

    இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை , கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று . ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது . பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது . இலக்கியத்தின் கொள்கைகள் , செயல் முறைகளைத் தெளிவுபடுத்துகிறது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இவர்கள் இருந்தார்கள் / Ivargal Irunthargal

    160 149
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஈழ இலக்கியம் / Eezha Ilakkiyam

    190 177
  • SAVE 7%
    Add to cart

    உச்சவழு / Uchavazhu

    200 186
  • Out Of Stock SAVE 7%
    Read more

    உலோகம் / Ulogam

    180 167
  • SAVE 7%
    Add to cart

    ஏழாம் உலகம் / Ezhaam Ulagam

    280 260
  • SAVE 7%
    Add to cart

    ஐந்து நெருப்பு / Ainthu Neruppu

    280 260

    குற்றத்தைச் செய்யவைப்பது என்ன ? தன்னை சமூக உறுப்பினன் என உணர்பவனே மனிதன் . ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னைத் தனிமனிதனாக உணர்கிறது . தன் நலத்தை . தன் மகிழ்ச்சியை நாடுகிறது . சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறிச்செல்கிறது . அவ்வண்ணம் மீறிச்செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது . தன்னை வெளிப்படுத்திவிட்ட நிறைவு அது . குற்றத்தின் , தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை . அதனூடாக வெளிப்படும் மனித ஆழத்தை அறிந்துவிட முயல்பவை . ஆகவே மனித அகமீறல்களின் பல தருணங்கள் இந்தக் கதைகளில் உள்ளன . அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் குற்றங்கள் . எத்தனை தொகுத்தாலும் மனிதன் முற்றாக தொகுக்கப்பட முடியாத தனித்தன்மை கொண்டவன் என்பதை இவை கண்டடைகின்றன .