Showing all 7 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    சுதந்திர தாகம் 1,2,3 / Suthanthira Thaagam 1,2,3

    1,500 1,395
    1946 ஆகஸ்ட் 16 ம் தேதி கல்கத்தாவில் நடந்த மதக் கலவரம்தான் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கே காரணமாக இருந்தது . இந்திய வரலாற்றிலேயே அதிபயங்கரமாக நடந்த அந்த மதக்கலவரத்தில் மூன்றே தினங்களில் 10,000 பேர் கொல்லப்பட்டார்கள் ; ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளானார்கள் . நடந்த படுகொலைகளும் கூட காட்டுமிராண்டித்தனமாக நடந்தன . இப்படுகொலைகளின் சாட்சியாக இதுபோன்ற நூற்றுக் கணக்கான புகைப்படங்கள் இன்று வரலாற்றின் ஏடுகளில் புகை படிந்து கிடக்கின்றன . இதையெல்லாம் ஒரு மீள்பார்வைக்கு உட்படுத்த விரும்பினால் நாம் வாசிக்க வேண்டிய ஒரே எழுத்தாளர் சி.சு. செல்லப்பா தான் . அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்கள் யாரும் இவ்வளவு நேரடியாக ஏன் , மறைமுகமாகவும் கூட சுதந்தரப் போராட்ட காலகட்டத்தின் அரசியலை எழுதியதில்லை . இதனாலேயே சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது . –
    – சாரு நிவேதிதா
  • SAVE 7%
    Add to cart

    ஜீவனாம்சம் / Jeevanamsam

    150 140

    பிராமண விதவைப் பெண்ணாகிய சாவித்திரியின் மன உலகை நினைவோட்டமாக விவரித்துச் செல்கிறது நாவல் . ஆனால் அதற்குள் வாசகரை வெவ்வேறு கோணங்களுக்குள் நுழையச் செய்யும் நுட்பம் கைவந்திருக்கிறது . பெண்ணொருத்தியின் வாழ்வாகிய பெருவெளியைக் காட்டும் ஆற்றல் இதற்குள் பொதிந்திருக்கிறது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    புதுக்குரல் / Puthukkuralkal

    140 130
  • SAVE 7%
    Add to cart

    முறைப்பெண் / Muraipenn

    150 140
    இது ஒரு வேகம் மிகுந்த வலுவான நாடகம் . தயாரிப்பிலும் நடிப்பிலும் அதிக உழைப்பையும் பாசாங்கின்மையும் தேவைப்படும் . ஆரம்பம் முதலே ஒரு விறைப்பு . கடைசி வரையிலும் . நாடகத்தின் வலுவே சம்பாஷணையில்தான் . இது குடும்ப நாடகம் . நிஜ மனிதர்கள் சம்பந்தப்பட்டது .
    – சி.சு. செல்லப்பா
  • SAVE 7%
    Add to cart

    கூடுசாலை / Kuutucaalai

    150 140
  • SAVE 7%
    Add to cart

    சி.சு.செல்லப்பா சிறுகதைகள் / Chellappa sirukathaikal

    800 744

    முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம் . எல்லாப் பத்திரிக்கைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன . அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா . அவரின் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது . 1940 களின் வாழ்க்கைக் குறித்த செறிவான இலக்கிய சாட்சியமாக இக்கதைகள் விளங்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை .

  • SAVE 7%
    Add to cart

    வாடிவாசல் / Vaativaasal

    100 93
    ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம் . அது விளையாட்டும்கூட . புய வலு , தொழில்நுட்பம் , சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும் . தான் போராடுவது மனிதனுடன் அல்ல , ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன் . அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்குக் காத்துக்கொண்டிருக்கும் . காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது . அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை .
    அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது . நுட்பமாகவும்கூட . ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப பட்டது . படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை .