Showing all 3 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    எது நிற்கும் ? / Etu Nirkum ?

    250 233
    தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காதபோதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர் . நாராயணசாமி .
    ‘ பசித்த மானுடம் ‘ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார் . மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கும் இவர் , நவீன வாழ்வை மரபின் கண் கொண்டும் மரபை நவீன அறிவின் கண் கொண்டும் பார்ப்பதன் தடயங்கள் இவரது சிறுகதைகள் .
    தத்துவ விசாரம் , சமூக விமர்சனம் , வாழ்வின் புதிர்கள் குறித்த குழப்பமும் வியப்பும் , பழமைக்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான ஊடாட்டம் எனப் பல்வேறு தளங்களில் வெளிப்படும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பரிமாணங்களில் ஒன்று .
    இந்தப் பரிமாணத்தின் பல்வேறு கூறுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவடுகளைத் தொகுக்கும் முயற்சியே இந்தத் தொகுப்பு .
    அரவிந்தன்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கரிச்சான் குஞ்சு சிறுகதைகள் / Karichchan Kunju Sirukathaigal

    890 828
    1943-1983 கால அளவில் , ‘ கிராம ஊழியன் ‘ முதல் ‘ அமுதசுரபி ‘ இதழ் முடிய கரிச்சான் குஞ்சு எழுதிய தொண்ணூற்றொன்பது சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது . பல்வேறு பழைய இதழ்களிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட இருபத்தைந்து சிறுகதைகள் முதன்முறையாக நூல்வடிவில் பிரசுரம் பெறுகின்றன .
    வாழ்வின் தீர்மானிக்க முடியாத கணங்களால் உருவான உணர்ச்சிகளே இக்கதைகள் . லெளகீக வாழ்வின் அபத்தங்களைக் காட்டும் மாய வித்தைக்காரனாகவும் , சிறுகதைகளின் சூட்சுமங்களை வெளிப்படுத்திய கலைஞனாகவும் கரிச்சான் குஞ்சு அடைந்த வெற்றியின் சான்று இச்சிறுகதைத் தொகுப்பு .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பசித்த மானிடம் / Pacitta maanitam

    325 302