Showing the single result

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இறுதி யாத்திரை / Iruthi Yathirai

    150 140

    வாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள் . அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது . புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்ப முடியுமெனத் தெரியவில்லை . மரணம்தான் இதுவரையிலான வாழ்வின் மேடுபள்ளங்களை இட்டு நிரப்பி நம்மை தூர நின்று கைகட்டிப் பார்க்க வைக்கிறது . எந்த மேற்பூச்சும் வசீகரமுமற்ற இந்த எழுத்து நம் ஜீவனைப் பற்றி இழுக்கிறது . அதன் அப்பழுக்கற்ற , பரிசுத்தமான வாழ்வின் உண்மையை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . காலம் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கண்முன்னே ஒரு பனிக்கட்டி மாதிரி உருகி வழிந்ததை எம்.டி.வி. இந்நாவலில் அப்படியே பதிவு செய்கிறார் . ஏனெனில் இது அவரின் சொந்த வாழ்வு துளியாகிலும் சிந்திவிட முடியுமா என்ன ?