புத்தம் வீடு ‘ எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தோற்றம்கொள்ளும் நாவல் .
லிஸியும் தங்கராஜும் இளம்பருவத்தில் கொண்ட ஈர்ப்பு காதலாக முதிர்ந்து திருமணத்தில் கனிய நீண்ட காலம் காத்திருக்கிறார்கள் . தடைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள் . இறுதியில் இணைகிறார்கள் . முதல் சந்திப்புக்கும் முதல் நெருக்கத்துக்கும் இடையில் வருடங்கள் கடந்துபோகின்றன . இடங்கள் மாறுகின்றன . மனிதர்கள் கடந்து போகிறார்கள் . அவர்கள் உறவாடுகிறார்கள் . காசுக்காகத் தகப்பனை ஏய்க்கிறார்கள் . பகைகொண்டு சொந்தச் சகோதரனையே கொல் கிறார்கள் . குலப்பெருமை பேசுகிறார்கள் . புதிய தலைமுறையோடு பிணங்குகிறார்கள் . காலத்துக்கேற்ப மாறுகிறார்கள் .
இது லிஸியின் கதை . மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணி அவள் . அவளை மையமாகக்கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை . ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படும் அவளுடைய சிநேகச் சரடின் மறுமுனையில்தான் அவளைத் தூற்றியவர்களும் விரும்பியவர்களும் இயங்குகிறார்கள் .
படைப்பு இயல்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய ஆக்கங்களில் ஒன்று ‘ புத்தம் வீடு ‘ . கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது . எனினும் இன்னும் வாசிப்பில் சுவை குன்றாமல் துலங்குகிறது .