நகரத்தார் சமூகத்திலே நடந்த ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அதனை மலாயா வரலாற்றுப் பின்னணியோடு இங்கு வாழ்ந்த பிற இன மக்களின் வாழ்க்கை முறையையும் பிணைத்துக் கதை சொல்லியிருக்கும் பாங்கிற்கு இன்பா சுப்பிரமணியன் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும் . இந்தப் படைப்பு , எதிர்காலச் சந்ததியினருக்கு கடந்தகால நிகழ்ச்சிகளை , பண்பாட்டுக்கூறுகளை தெரிந்து கொள்ளப் பயன்படும் ஒரு ஆவணக்குவியலாகவே நான் கருதுகிறேன் .
– கோலாலங்காட் அ.அரங்கசாமி , மலேசியா
அசுர வேகத்தில் நகரமயமாதலில் தொலைந்து போனதையே மறந்து போய்க் கொண்டிருக்கும் நம் சமூகத்தின் ஒரு பகுதியின் தடயங்களைப் பத்திரப்படுத்தியிருப்பதாய் தோன்றுகிறது . அதுவே இந்த நம்பிக்கையே இந்நாவலைக் கொண்டுவரும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது .