SAVE 7%
In Stock

வாசனை / Vacanai

390 363

கூறியது கூறல் ‘ , ‘ போலச் செய்தல் ‘ இவையிரண்டையுமே மறுதலித்து மேலெழும் சுந்தர ராமசாமியின் படைப்புலகின் ஆகச் சிறந்த கதைகளின் தொகுப்பு இந்நூல் .
யதார்த்தக் கதைகளின் வழியே வாசகனை மனவிரிவுக்கு உட்படுத்தும் அதேவேளையில் மொழியழகோடு கூடிய அபூர்வமான சொல்லாட்சிகள் மூலம் கவித்துவத் தருணங்களைத் தேர்ந்த இசைக் கலைஞனைப்போல ஸ்ருதி பிசகாமல் மீட்டும் சு.ரா , நேற்றின் வழித்தடத்திலிருந்து விலகி புதியக் கருக்களைத் தேடிக் கண்டடைந்து முன்னோக்கிச் சென்ற பயணத்தை துலக்கமாக வெளிப்படுத்தும் தொகுப்பு இது . அவர் வரிகளின் இடையே விட்டுச் செல்லும் மௌன இடைவெளிகளைச் சுயஆற்றலால் இட்டு நிரப்பிக்கொள்ளும் வாசகன் தன் மனச்சுனைகளைப் பெரும் மன எழுச்சியோடு கண்டுகொள்கிறான் .
எழுத்தாளனின் “ உள்ளொளி இருளில் மிருகங்களின் கண்கள் போல் பரவசம் ஊட்டக் கூடியது ” என்று சு.ரா. எழுதினார் . அந்த உள்ளொளியை நம்பி ஏற்றுச் செயல்பட்ட ஒரு படைப்பாளியின் மகத்தான கதையுலகம் இது .

1 in stock

Additional information

Weight 0.413 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789380240473

NO OF PAGES

365

PUBLISHED ON

2011

PUBLISHER NAME