SAVE 7%
In Stock

பெருமாள்முருகன் சிறுகதைகள் / Perumaalmurukan kataikal

790 735

மார்ச் – ஏப்ரல் , 1988 ‘ கணையாழி’யில் வெளியான ‘ நிகழ்வு ‘ என்னும் மிகச்சிறு கதையே ஓர் இதழில் வெளியான எனது முதல் சிறுகதை . அப்போது முதல் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்திருக்கிறேன் . 2015 ஜனவரியில் ‘ காலச்சுவடு ‘ இதழில் வெளியான ‘ மாலை நேரத் தேநீர் ‘ கடைசிக் கதை , அதற்குப் பின் இந்த இரண்டாண்டுகளில் ஒரு கதைகூட எழுதவில்லை . ஏற்கனவே நான்கு தொகுப்புகளாக வெளியானவை , நூல்களில் இடம்பெறாதவை அனைத்தும் சேர்ந்த ஒட்டுமொத்தத் தொகுப்பு இது . இவற்றைத் தொகுத்துப் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் கதைகள் எழுதியிருக்கலாமே என்னும் உணர்வு தோன்றியது . சவாலான வடிவமாகிய சிறுகதைக்குள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நினைவோடியது . இனிமேல் எழுதப் போகும் கதைகளைப் பற்றிச் சிந்திக்க உத்வேகம் உருவாயிற்று . மேலும் இக்கதைகள் என் இலக்கிய ஆற்றலின் போக்கை உணர்த்தும் பெரும்சான்றாக விளங்கி வாசிப்போரின் அனுபவ வெளியை விரிவாக்கும் எனவும் நம்புகிறேன் .
பெருமாள்முருகன்

1 in stock

Additional information

Weight 0.776 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789352440771

NO OF PAGES

719

PUBLISHED ON

2016

PUBLISHER NAME