வயதான காரணத்தால் இன்று என் கைவிரல்கள் பேனாவைப் பிடித்தாலே பின்னிக்கொண்டுவிடுகின்றன . எழுதுவது அநேகமாக அசாத்தியமாகிவிட்டது .
இத்தொகுப்பிலுள்ள ஐந்து படைப்புகள் நான் நவம்பர் 2010 தொடங்கி ஆகஸ்ட் 2011 வரை எழுதியவை . இக்கதைகள் மங்கலாக இருந்த எனது கடந்த கால நினைவுகள் சிலவற்றைத் தெளிவாக்கின . வாசகர்களும் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள இயலும் என்று நம்புகிறேன் .