SAVE 7%
Out of Stock

திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 / Thirunelveliyum Ezhuchiyum Va.Vu.Si.Yum 1908

290 270

1908 மார்ச் 13 . வெள்ளிக்கிழமை . கப்பல் ஒட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர் . தெருவில் இறங்கினர் . கூட்டம் கூடினர் . வேலைநிறுத்தம் செய்தனர் . அரசு சொத்துகளை அழித்தனர் . இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கியது . துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மாண்டனர் , நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாயினர் . மக்கள்மீது திமிர்வரி விதித்த அரசு , ஆறு மாதங்களுக்குத் தண்டக்காவல் படையை நிலைநிறுத்தியது . அதற்கு முன்போ பின்போ விடுதலைப் போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம் . ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது . இந்த எழுச்சியின் நாயகரான வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது இந்நூல் , ஆய்வுத் திறமும் அறிவார்ந்த சுவாரசியமும் மிளிர இந்நூலை எழுதியிருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி .

Out of stock

Additional information

Weight 0.295 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789355231345

NO OF PAGES

248

LANGUAGE

PUBLISHED ON

2022

PUBLISHER NAME