SAVE 7%
Out of Stock

சோழர்கள் (1&2) / The Cholas (1&2)

1,250 1,163

பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம் . கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே , கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன . யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன . இத்தகு சிறப்புடைய வரலாற்றில் , சோழர்களின் ஆட்சி , ஒரு பொற்காலமாய்த் திகழ்கிறது என்றால் மிகையாகாது .
சோழர்களைப் பற்றி பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல் , அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது . இத்தகு அருமுயற்சியை இதற்கு முன்னர் வேறு எவரும் மேற்கொண்டதில்லை .
சோழர் காலத்தின் முழுமையான வரலாறு , சோழப் பேரரசின் ஆட்சி முறை , வரிவிதிப்பு , நிதி , மக்களின் வாழ்க்கை முறை , வாணிபம் , தொழில் , விவசாயம் , நிலஉரிமை , கல்வி , சமயம் , கலை , இலக்கியம் ஆகியவற்றை , பேராசிரியர் சாஸ்திரி அவர்கள் ஆய்ந்தமைந்த சான்றுகளுடன் தக்கமுறையில் படம்பிடித்துக் காட்டுகிறார் .

Out of stock

Category:

Additional information

Weight 1.484 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Hard cover

ISBN

9788123411651

LANGUAGE

NO OF PAGES

1781

PUBLISHED ON

1989

PUBLISHER NAME

TRANSLATOR

கே. வி. ராமன்