SAVE 7%
In Stock

அத்தைக்கு மரணமில்லை / Athaiku Maranamillai

125 116

மூன்று பெண்கள் , மூன்று தலைமுறைகள் , மூன்று உலகங்களைக் கோத்துப் பின்னப்பட்ட கதை இது . பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள் , ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுசெய்கிறது . மரணத்திற்குப் பிறகும் அவரது ஆசைகள் மடிவதில்லை ; மணமாகி அக்குடும்பத்துக்குள் வரும் மருமகளிடம் நகைப்பெட்டியை ஓப்படைத்த பின்பும் நகைகள்மீது அவருக்கிருக்கும் பிடிப்பு போய்விடவில்லை . அவரது ஆவி அவளைக் கண்காணித்தபடியே இருக்கிறது . எளிய குடும்பத்திலிருந்து வரும் மருமகளுக்குத் தனது துணையைத் தேர்வுசெய்யும் உரிமை இருக்கவில்லை என்றாலும் , தானும் தடுமாறிக்கொண்டிருக்கும் தனது குடும்பமும் செல்லவேண்டிய பாதையை முடிவுசெய்யும் துணிச்சலை நகைப்பெட்டி அளிக்கிறது . மூன்றாவது தலைமுறைக்காரியான அவளது மகளுக்குத் தனக்கான இலக்கையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது . நகைப்பெட்டிக்கு அவளிடம் வேலையில்லை . அத்தையம்மாவின் ஆசைகள் இவள்மூலமாக நிறைவேறுகிறதா ? இயல்பான மொழியில் உயிரோட்டமான நடையில் ஒரு மர்மக்கதையின் விறுவிறுப்புடன் புனையப்பட்டிருக்கிறது இந்தக் குறுநாவல் ,

1 in stock

Additional information

Weight 0.135 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789355231260

LANGUAGE

NO OF PAGES

112

PUBLISHED ON

2021

PUBLISHER NAME

TRANSLATOR

அருணவா சின்ஹா / Arunava Sinha