Showing all 2 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கோலப்பனின் அடவுகள் / Kolappanin Adavugal

    250 233
    கோலப்பனின் தோற்றம்
    பூமி உருவாவதற்கு முன்பே கோலப்பன் பிறந்து விட்டார் . கோலப்பனின் பிறப்பை அண்டப் பெருவெடிப்பில் நிகழ்ந்த ஒரு பித்தவெடிப்பாகவே நாம் பாவிக்க வேண்டும் . கோலப்பனின் அக்கா பிறப்பதற்கு முன்பாகவே அவளது மகன் பாப்பச்சன் பிறந்து கோலப்பனை தாய்மாமனாக்கினான் என்பதை இந்த வரலாறு எப்போதும் சொல்லாது . ஆதாமும் ஏவாளும் அதற்குப் பிற்பாடாகவே பிறந்தனர் .
    ” கோல் என்பது அதிகாரம் , அப்பன் என்றால் சகலத்தையும் படைத்தவன் ‘ என்பதை ஒரு முறை சொல்லிப் பாருங்கள் . கோலப்பனின் தோற்றத்தில் உள்ள பிழைகள் மறைந்து தெளிவு பிறப்பதைக் காண்பீர்கள் . கோ என்றால் அரசன் , கோமாதா என்றால் பசு , கோயில் என்றால் அரசனின் இல்லம் , கோஷ்டி என்றால் பஜனைக் குழு , கோணையன் என்றால் கோலப்பன் என்பதாய் ‘ கோ ‘ என்று துவங்கும் வார்த்தைகளுடைய பட்டியலின் நீளமானது வெகு சுவாரஸ்யமானவை .
    எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு கோலப்பன் இருப்பான் . எல்லா கோலப்பன்களோடும் ஒரு பாப்பச்சன் இருப்பான் . கடவுளும் , சாத்தானும் என்ற கோட்பாட்டுக் கோப்பிராயங்களும் இதனுள்தான் அடங்கும் . எல்லா மதநூல்களும் நன்மை தீமையென இதைத்தான் எடுத்துரைக்கின்றன . இங்கே கோலப்பனும் , பாப்பச்சனும் கடவுளாகவும் , சாத்தானாகவும் மாறி மாறி உருவெடுப்பதுதான் மனிதர்கள் பன்னெடுங்காலமாய் ஏறெடுக்கும் கோமாளித்தனங்களின் நீட்சி . இதற்கு நாகரீகம் என்றொரு தெண்டித்தனமான பெயர் வேறு வைக்கப்பட்டிருக்கிறது .
    எது எங்கனமோ உங்களால் கடவுளையோ , சாத்தானையோ , கோலப்பனையோ , பாப்பச்சனையோ கண்களால் காணமுடியாது . மாறாக உணரமுடியும் . அதையும் மீறி காண வேண்டுமென்றால் புகைப்படத்தில் இருக்கும் சர்வலோகாதிபரைக் காணுங்கள் ! மோட்சம் கிட்டும் .
    பாப்பச்சன்
    ( மருமோன் ஆஃப் கோலப்பன் )
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ழ் / Izh

    220 205
    உலகமொழிகளிலேயே ‘ ழ ‘ என்ற சிறப்பெழுத்து தமிழ் மொழி தவிர்த்து வேறு எந்த மொழியிலேயும் கிடையாது என்னும் பெருமை யாருக்கு இருக்கிறதோ இல்லையோ பானமுற்றோருக்கு உண்டு …. அவர்களைத் தவிர்த்து யாரும் அந்த எழுத்தை உச்சரிப்பதில்லை என்று நினைக்கையில் என் கண்களில் நீர் ஆறாய்ப் பெருகுவதை என்னால் தடுக்கமுடியவில்லை . உங்களுக்கு சந்தேகமிருந்தால் டாஸ்மாக் வாசலில் நின்று கொண்டு எதிரில் வரும் மதுமக்களிடம் போய் , “ குட் நைட் பிரதர் ” என்று சொல்லிப் பாருங்கள் உடனடியாக சேம் டு யூ பிரதேழ் ! ” என்னும் பதில் உங்களுக்குக் கிடைக்கும் .
    ‘ லகர , ளகர , ழகரங்களை உச்சரிப்பதில் இந்தச் சாமானியர்களுக்கு என்ன கொள்ளையோ ? ‘ என்பது போலத்தான் நடந்து கொள்கிறார்கள் . ஒருமுறை கோலப்பன் ஒருவர் கடையில் போய் , “ எண்ணே வாலப்பலம் இருக்கா ? ” என்று கேட்டதற்கு , கடைக்கார பாப்பச்சன் இவ்வாறு பதிலளித்தார் , “ வாலப்பளம் இள்ள தம்பி ! ” இவர்களால்தான் மெல்லச் சாகிறது தமில் .
    இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை . சிம்பிளாகச் சொல்ல வேண்டுமானால் , தற்குறி , பித்துக்குளி , வட்டன் , அரைவேக்காடு , கோந்தன் , வாபொளந்தான் , கருங்கோழி என்று சூழலுக்குத் தகுந்தவாறு ‘ பொதுமக்கள் ‘ இவரை அழைப்பார்கள் . ஆனால் ‘ மதுமக்கள் ‘ இவரை ஒரு ஞானி என்று சொல்கிறார்கள் . ” இந்த உலகம் ஒரு சூட்டுத் தழும்பு ! ” என்ற கருத்தை ஆசிரியர் முன்வைத்தபோது இவருடைய வயது அறுநூற்றி இருபது . சாக்ரடீஸையே காதில் விஷம் ஊற்றிக் கொன்ற உலகல் லவா ? ஆகையால் அமைதிக்கான நோபல் பரிசுக்காக இவர் காத்திருக்கிறார்