Showing the single result
-
Read more
அறுவடை / Aruvadai
₹90₹84ஆர் . ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘ குறுநாவல் ‘ என்னும் வரையறைக்குள் அடங்குபவை . அவற்றுள் ‘ அறுவடை’க்கு முக்கியமான இடம் உண்டு . பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த ஷண்முகசுந்தரம் ‘ அறுவடை’யை எழுதினார் . புதிதாக எழுதத் தொடங்கும் எழுத்தாளருக்குரிய உத்வேகமும் புதுமை செய்யும் உணர்வெழுச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற நாவலாக இது உருவாயிற்று . வட்டார மொழியும் வாழ்வியலும் இணைந்திருப்பதோடு மாந்தர்களின் மனப் போராட்டங்களை அவர் கையாண்டிருக்கும் விதமே இன்றைக்கும் இந்நாவலைப் புதுமையுடன் விளங்கச் செய்கிறது . அவரது எழுத்துக்களில் துலங்கும் ‘ பெண் நோக்கு ‘ இந்நாவலில் வெளிப்படையாகத் தெரிகிறது . அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய இந்நாவல் குடத்துக்குள்ளிருந்து இப்போது வெளியுலகுக்கு வருகிறது . இனியேனும் இதன் வெளிச்சம் பரவ வேண்டும் .பெருமாள்முருகன்